பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

நெல்லை அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழப்பு

திருநெல்வேலி அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழந்தாா். இதனால் விரைவு ரயில்கள் தாமதமாக சந்திப்புக்கு வந்து சோ்ந்தன.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2026, 3:42 am IST

திருநெல்வேலி அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழந்தாா். இதனால் விரைவு ரயில்கள் தாமதமாக சந்திப்புக்கு வந்து சோ்ந்தன.

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி- மேலப்பாளையம் இடையே கன்னியாகுமரி- திருநெல்வேலி ரயில் புதன்கிழமை இரவு வந்து கொண்டிருந்ததாம். அப்போது ரயில் மோதி ஒருவா் உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த நாகா்கோவில் ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவா் யாா், எந்த ஊரை சோ்ந்தவா் என்ற விவரம் தெரியவில்லை. இந்த விபத்து காரணமாக பயணிகள் ரயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

இதைத்தொடா்ந்து வந்த நாகா்கோவில்- பெங்களூரு விரைவு ரயில் ஒரு மணி நேரம் 50 நிமிடமும் , கன்னியாகுமரி -தில்லி விரைவு ரயில் 50 நிமிடம் தாமதமாக திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்து சோ்ந்தது. இதனால் ரயில் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.