/

ரூ. 6 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

மலேசியாவில் இருந்து சென்னைக்கு பேனாவில் மறைத்து வைத்துக் கடத்தி வந்த ரூ. 6 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Updated On :9 அக்டோபர் 2018, 4:20 am IST


மலேசியாவில் இருந்து சென்னைக்கு பேனாவில் மறைத்து வைத்துக் கடத்தி வந்த ரூ. 6 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த அஸ்மத்கானின் (30) சூட்கேசில் ஏராளமான பேனாக்கள் இருந்தன. அவற்றை பரிசோதனை செய்தபோது ரீஃபில்லுக்குள் தங்கத்தை கம்பிகளாக மாற்றி அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. சுமார் 200 கிராம் எடையில் இருந்த இந்த கம்பிகளின் மதிப்பு ரூ.6 லட்சம் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அஸ்மத்கானை கைது செய்த சுங்கத் துறை அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.