தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம்

மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம், மேற்கூரை ஆகியன ரூ.15 லட்சம் செலவில் நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

Updated On :3 செப்டம்பர் 2018, 11:12 pm


மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம், மேற்கூரை ஆகியன ரூ.15 லட்சம் செலவில் நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் முதல் மாடியில் உள்புறமாக பயணிகள் டிக்கெட் கவுன்ட்டர் செயல்பட்டு வந்தது. இதனால், படிக்கட்டுகளில் ஏறிச்சென்று டிக்கெட் பெறுவதில் பயணிகள் சிரமத்தை சந்தித்தனர். இதையடுத்து, ஆர்.எஸ். பாரதி எம்.பி.யிடம் முதலாவது நடைமேடையில் டிக்கெட் கவுன்ட்டர் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம், மேற்கூரை அமைத்துக் கொடுக்கப்பட்டது. இதன் தொடக்கவிழா மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் முதல் நடைமேடையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், ஆர்.எஸ். பாரதி எம்.பி., சட்டப் பேரவை உறுப்பினர் தா.மோ. அன்பரசன், ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் கே.மனோஜ், முதுநிலை வர்த்தக மேலாளர் ஆர்.சத்தியநாராயணஹரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.