சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் ஆணையரகத்தில் சாலை பாதுகாப்பு காட்சிக் கூடம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
குழந்தைகளுக்கான சாலை பாதுகாப்புக் காட்சிக் கூடம் வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் ஆணையரகத்தில் உள்ள ஏழாவது தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் காட்சிக் கூடத்தின் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையர் ஏ.அருண் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் தலைமை வகித்து, அந்தக் கூடத்தை திறந்து வைத்தார்.இந்தக் காட்சிக் கூடத்தில் போக்குவரத்து சிக்னல் குறியீடுகள் அவை பற்றிய விளக்கங்கள், சாலை பாதுகாப்பு உபகரணங்கள், சாலை பாதுகாப்பு குறித்த பதாகைகள், ஒரு நடமாடும் ரோபோ ஆகியவை இடம் பெற்றுள்ளன. ஒரு தனியார் நிறுவனத்தில் பயிலும் மாணவர்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, குழந்தைகளை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ காட்சிக் கூடத்துக்கு வரும் மாணவர்களிடம், சாலை போக்குவரத்து விதிமுறைகளைக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், இணை ஆணையர்கள் பி.பாலகிருஷ்ணன், ஏ.ஜி.பாபு, சுதாகர்,நஜ்முல் ஹோடா,துணை ஆணையர் ஆர்.திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே மாதத்தில் சில்லறைப் பணவீக்கம் 3.93% ஆக உயர்வு!

மமதாவுக்கு எதிரான திரிணமூல் காங். அணியில் 64 எம்எல்ஏ-க்கள்! நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அழைப்பு!

ஒருநாள் தொடர்: விராட் கோலி இடத்தில் களமிறங்கப்போவது யார்?

மூகாம்பிகை கோயிலுக்கு வெள்ளி வாள் காணிக்கை... எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் விஜய்!!
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy



