கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?காங்கிரஸ் அலுவலகத்தில் ஐ லவ் யூ என்று எழுதிவைத்திருந்த திருடன்! கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன் அதிமுகவில் இருந்து செம்மலை விலகல் பிகார்: நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் தீ விபத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு வாரத்தின் முதல் நாளில் அதிர்ச்சி கொடுத்த பங்குச் சந்தைகள்!
/

அடையாறு பகுதியில் வழிப்பறி: 5 பேர் கைது

சென்னை அடையாறு பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Updated On :24 ஜனவரி 2019, 3:29 am IST


சென்னை அடையாறு பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அடையாறு பகுதியில் தனியாக நடந்து செல்கிறவர்களை குறி வைத்து ஒரு கும்பல் செல்லிடப்பேசி, பணப்பை ஆகியவற்றை பறித்து வந்தது. இக் கும்பல் குறித்து போலீஸார் தீவிர விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் தனிப்படை போலீஸார் அடையாறு கஸ்தூரிபாய்நகரில் வாகனச் சோதனையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் ஒரு மொபெட்டில் வந்த இளைஞரை பிடித்து போலீஸார் விசாரணை செய்தனர். இதில் அவர், துரைப்பாக்கம் கண்ணகிநகர் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (19) என்பதும், அவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அடையாறு பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அஜித்குமார் கொடுத்த தகவலின்பேரில் கண்ணகி நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சாமுவேல் (23), துரைப்பாக்கத்தைச் சேர்ந்த குமரவேல் (30), புதுப்பேட்டையைச் சேர்ந்த பாட்ஷா (18) உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். 
இவர்களிடமிருந்து ஏராளமான திருட்டு செல்லிடப்பேசிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.