சென்னை அடையாறு பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அடையாறு பகுதியில் தனியாக நடந்து செல்கிறவர்களை குறி வைத்து ஒரு கும்பல் செல்லிடப்பேசி, பணப்பை ஆகியவற்றை பறித்து வந்தது. இக் கும்பல் குறித்து போலீஸார் தீவிர விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் தனிப்படை போலீஸார் அடையாறு கஸ்தூரிபாய்நகரில் வாகனச் சோதனையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் ஒரு மொபெட்டில் வந்த இளைஞரை பிடித்து போலீஸார் விசாரணை செய்தனர். இதில் அவர், துரைப்பாக்கம் கண்ணகிநகர் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (19) என்பதும், அவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அடையாறு பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அஜித்குமார் கொடுத்த தகவலின்பேரில் கண்ணகி நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சாமுவேல் (23), துரைப்பாக்கத்தைச் சேர்ந்த குமரவேல் (30), புதுப்பேட்டையைச் சேர்ந்த பாட்ஷா (18) உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து ஏராளமான திருட்டு செல்லிடப்பேசிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாகிஸ்தான் பந்துவீச்சு: ஆஸி. அணியில் அறிமுகமான யு19 வீரர் ஆலிவர் பீக்!

பார்ட்னர்ஷிப்பில் வரலாறு படைத்த ஷுப்மன் கில் - சாய் சுதர்சன்!

மணிப்பூர் புதிய டிஜிபி ஜூன் 1இல் பொறுப்பேற்பு

கடவுள்களின் ஆடுகளம்... செயலிழந்த எரிமலை உச்சியில் அமைக்கப்பட்டுள்ள கால்பந்து திடல்!
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |


