சென்னை தியாகராயநகரில் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மேலூர் புது மார்க்கெட் தெருவைச் சேர்ந்த இஸ்மாயில் மகன் ஷாருக்கான் (19). இவர் மதுரையில் உள்ள மத்திய பிளாஸ்டிக் தொழில்நுட்ப நிறுவனத்தில் மூன்றாமாண்டு பட்டயப் படிப்பு படித்து வந்தார்.
இந்த தொழில்நுட்ப நிறுவனத்தின் 50-ஆவது ஆண்டு விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
இதில் பங்கேற்பதற்காக மதுரையில் படிக்கும் மாணவர்கள், சென்னைக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்தனர். அவர்கள் அனைவரும், மாம்பலம் கிரசன்ட் பார்க் தெருவில் உள்ள ஒரு சர்வீஸ் அப்பார்ட்மெண்டில் தங்க வைக்கப்பட்டனர். இதில் ஷாருக்கான் செல்லிடப்பேசியில் அந்த கட்டடத்தில் மூன்றாவது மாடியில் நின்று பேசிக் கொண்டிருந்தாராம்.
அப்போது திடீரென ஷாருக்கான் மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் பலத்தக் காயமடைந்த அவர், சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து மாம்பலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்

எண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலை
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


