சென்னை அமைந்தகரையில் ரூ. 10 லட்சம் கடன் தகராறில் பெண்ணை காரில் கடத்திச் சென்று தாக்கிய நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்த திலகவேணி, கடந்த 2012 -ஆம் ஆண்டு சகாயராணி என்பவரிடமிருந்து தற்போது அவர் வசித்துவரும் வீட்டை ரூ.50 லட்சம் விலை பேசி முன்பணமாக ரூ. 35 லட்சம் கொடுத்துள்ளார். மீதிப் பணத்தை 2 ஆண்டுகளுக்குள் கொடுத்து விடுவதாகக் கூறி, அதில் ரூ. 5 லட்சம் மட்டுமே அளித்ததாகக் கூறப்படுகிறது.
மீதி ரூ.10 லட்சத்தை தரும்படி சகாயராணி தரப்பினர் பலமுறை கேட்டும் திலகவேணி கொடுக்கவில்லையாம். இதையடுத்து சகாயராணியின் கணவர் தாஸ், திலகவேணியை காரில் கடத்திச் சென்று கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள விடுதியில் அடைத்து வைத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்து தப்பிய திலகவேணி, நீலாங்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். கடத்தல் சம்பவம் நடந்த இடம் அமைந்தகரை பகுதி என்பதால் அங்கு தகவல் அளிக்கப்பட்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ.94.65! 11 காசுகள் உயர்வு!

கூகுள் குரோமில் விமானம் ஓட்டும் அனுபவம்! பெறுவது எப்படி?

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

ஸ்காட்லாந்துக்கு எதிராக நெய்மர் 100% விளையாடுவார்..! பயிற்சியாளர் அன்செலாட்டி உறுதி!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


