பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண்கள் குறைந்ததால் சிவகாசியில் பள்ளி மாணவர் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நேரு சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் அருணாசலம். காகித அட்டைப்பெட்டி தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் நவீன்(18), சென்னை எழும்பூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வந்தார். பிளஸ் 2 தேர்வில் இவர், 600-க்கு 298 மதிப்பெண்கள் எடுத்திருந்ததால் மன வேதனையில் இருந்து வந்தாராம். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நவீன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்தப் புகாரின் பேரில் சிவகாசி நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.