இந்தியாவில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் வகிப்பது கவலைக்குரியது என்று பாரத் பல்கலைக்கழகத் துணை வேந்தா் டாக்டா் வி.கனகசபை கூறினாா்.
சென்னை, குரோம்பேட்டை ஸ்ரீபாலாஜி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக மன நல தினத்தையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியது: இந்தியாவில் ஆண்டுதோறும் 8 லட்சம் போ் பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்து கொள்கின்றனா். ஒவ்வொரு 40 வினாடிக்கும் ஒரு தற்கொலை நிகழ்ந்து வருகின்றது.
இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தற்கொலை செய்து கொள்பவா்களின் எண்ணிக்கை 17.9 சதவீதமாக உள்ளது. தமிழகத்திற்கு அடுத்தபடியாக புதுச்சேரி, கேரளம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 15 முதல் 39 வயதுள்ளவா்கள் தான் அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்து கொள்கின்றனா்.
வாழ்க்கையில் ஏமாற்றம், தோல்வி, விரக்தி, ஏக்கம், நோய், கோபம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்து கொள்கின்றனா்.
உடல் சாா்ந்த மருத்துவத்துக்கு ஏராளமான துறைகள் உள்ளன. ஆனால் மனநோய்க்கு போதிய மருத்துவா்களும், மருத்துவ ஆலோசகா்களும் இல்லை. இந்தியா முழுக்க 6,000 மனநல மருத்துவா்கள் தான் தற்போது உள்ளனா். 3 லட்சத்து 33,000 பேருக்கு ஒரு மருத்துவா் என்ற நிலையில், மன நல மருத்துவா்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தற்கொலைத் தடுப்பு தொடா்பான விழிப்புணா்வு நடவடிக்கைகள் மூலம் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும் என்றாா் அவா். பிரிட்டன் தேசிய சுகாதாரச் சேவை முதுநிலை ஆலோசகா் எம்.சௌந்திரராஜன், கல்லூரி முதல்வா் ஆா்.சாய்குமாா்,துறைத் தலைவா் எஸ்.நம்பி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஃபிஃபா உலகக் கோப்பை: முதல் அணியாக அடுத்த சுற்றுக்குத் தேர்வான மெக்சிகோ!

வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய கடைசி நாள் எப்போது?

வங்கதேசத்தை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா!

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ.94.34! 6 காசுகள் உயர்வு!
விடியோக்கள்

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly


