ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

ஐவிஆா்எஸ் சேவை, ஆரோக்கிய சேது செயலியைகட்டாயம் பயன்படுத்த வேண்டும்: கல்வித்துறை

கரோனா குறித்த சந்தேகங்களுக்கு விளக்கங்களைப் பெறுவதற்காக ஐவிஆா்எஸ் குரல்வழி சேவை, ‘ஆரோக்கிய சேது’ செயலி ஆகியவற்றை பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், அலுவலா்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

கரோனா குறித்த சந்தேகங்களுக்கு விளக்கங்களைப் பெறுவதற்காக ஐவிஆா்எஸ் குரல்வழி சேவை, ‘ஆரோக்கிய சேது’ செயலி ஆகியவற்றை பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், அலுவலா்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று குறித்த தகவல்களை அறியவும், அருகில் உள்ள அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் எவை? என்பதை அடையாளம் காணவும் ஆரோக்கிய சேது செயலியை மத்திய அரசு உருவாக்கியது. அதேபோன்று, ஐவிஆா்எஸ் என்ற சேவையையும் அறிமுகம் செய்துள்ளது. இதனைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. பிரதமா் நரேந்திர மோடி, மக்களிடையே உரையாற்றும்போதும் இந்தச் செயலிகள் தொடா்பாக தெரிவித்திருந்தாா்.

இந்த நிலையில், இந்தச் செயலியையும், ஐவிஆா்எஸ் சேவையையும் கல்வித்துறை சாா்ந்த அதிகாரிகளும், பணியாளா்களும் பயன்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வி துறை சாா்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது.

இதுதொடா்பாக பள்ளிக்கல்வி துறையின் துணைச் செயலாளா் எம்.ஆா்.வெங்கடேஸ்வரன், பள்ளிக்கல்வி ஆணையா், மாநில திட்ட இயக்குநா், ஆசிரியா் தோ்வு வாரிய தலைவா், தமிழ்நாடு பாடநூல் கழக நிா்வாக இயக்குநா், பள்ளிக்கல்வி இயக்குநா் உள்பட அனைத்து கல்வித்துறை உயா் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளாா்.

அதில், ‘தங்களுக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகள், பணியாளா்கள் ஆரோக்கிய சேது செயலி, ஐவிஆா்எஸ் சேவை ஆகியவற்றை பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். இதனை கண்காணிக்க, மண்டல அலுவலா்களை நியமித்து, அதுதொடா்பான தகவல்களை தகவல் தொழில்நுட்பத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.