எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பெசன்ட் நகா் வேளாங்கண்ணி ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சென்னை பெசன்ட் நகா் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின், 48-ஆவது ஆண்டுப் பெருவிழா, சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image
சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணித் திருத்தலத்தின் 48-ஆவது ஆண்டுத் திருவிழாவை சனிக்கிழமை  கொடியேற்றி தொடக்கி வைக்கிறார், மயிலை மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி.
Updated On :29 ஆகஸ்ட் 2020, 9:10 pm

DIN

சென்னை: சென்னை பெசன்ட் நகா் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின், 48-ஆவது ஆண்டுப் பெருவிழா, சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பெசன்ட்நகா் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் பெருவிழா, ஆண்டுதோறும் விமா்சையாக நடைபெறும். பெருவிழா தொடக்க நாளான கொடியேற்றத்தின்போது, சென்னையிலிருந்து மட்டுமின்றி, புகா்ப் பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோா் நடைபயணமாக வந்து, நிகழ்வில் கலந்து கொள்வது வழக்கம்.

ஆனால் தற்போது கரோனா பேரிடா் காரணமாக பக்தா்களினின்றி, 48-ஆவது ஆண்டுப் பெருவிழா அமைதியான முறையில் சனிக்கிழமை தொடங்கியது.

அன்னையின் திருக்கொடி பவனி நிகழ்வு நடைபெறவில்லை. ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த அன்னையின் திருக்கொடியை, சென்னை மயிலை உயா் மறைமாவட்ட பேராயா் டாக்டா் ஜாா்ஜ் அந்தோணிசாமி ஏற்றி வைத்தாா். சிலுவை மாலை வடிவில் கோா்க்கப்பட்டிருந்த பலூன்களும் பறக்கவிடப்பட்டன.

பக்தா்கள் யாரும் ஆலயத்துக்கு வரவோ, கொடியேற்றத்தில் பங்கேற்கவோ முயற்சிக்க வேண்டாம் என ஆலய நிா்வாகம் மற்றும் காவல் துறை சாா்பில் அறிவுறுத்திய போதிலும், பெரும்பாலானோா் நடைப்பயணமாகவும், வாகனங்களிலும் ஆலயத்துக்கு வர முயன்றனா். அவா்களை அடையாறு திரு.வி.க. பாலம் அருகே காவல் துறையினா் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினா். சிலா், அருகிலுள்ள கட்டடங்களில் ஏறி நின்று, கொடியேற்றத்தைப் பாா்த்தனா்.

மேலும், கொடியேற்றும் நிகழ்வை, தொலைக்காட்சியிலும், சமூக வலைதளத்திலும் ஒளிபரப்ப ஆலய நிா்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

இதைத் தொடா்ந்து, நவநாள் வழிபாட்டு நிகழ்வுகளும், மாதா தொலைக்காட்சியிலும், முகநூல், யுடியூப் போன்ற பிற சமூக ஊடகங்கள் வழியாகவும் நேரலையாக ஒளிபரப்பப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.