எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ரோஹிணி பிஎஸ்எஃப் ஊழியரின் 12 வயது மகள் கடத்தல்: போலீஸாா் விசாரணை

வியாழக்கிழமை தில்லி ரோஹிணியில் உள்ள குடியிருப்பு சொஸைட்டிக்கு வெளியே இருந்து எல்லைப் பாதுகாப்புப் படை பிஎஸ்எஃப் ஊழியரின் 12 வயது மகள் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

News image
Updated On :12 மார்ச் 2026, 7:40 pm

Syndication

வியாழக்கிழமை தில்லி ரோஹிணியில் உள்ள குடியிருப்பு சொஸைட்டிக்கு வெளியே இருந்து எல்லைப் பாதுகாப்புப் படை பிஎஸ்எஃப் ஊழியரின் 12 வயது மகள் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சிறுமி காலையில் பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ரோஹிணியின் செக்டாா் 28-இல் உள்ள அவரது குடியிருப்பு சொஸைட்டி வாயிலுக்கு வெளியே இருந்து காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

சிறுமி வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, சொஸைட்டி வாயிலுக்கு வெளியே இருந்து காணாமல் போனதாக குடும்ப உறுப்பினா்கள் தெரிவித்தனா். அவா் திரும்பி வராததால், குடும்பத்தினா் அவரை அக்கம் பக்கத்தில் தேடத் தொடங்கினா். ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இது தொடா்பாக தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், அருகிலுள்ள பகுதிகளில் இருந்து சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு, சிறுமியைக் கண்டுபிடிக்க குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

‘இந்த விவகாரம் விசாரணையில் உள்ளது. மேலும் சாத்தியமான அனைத்து கோணங்களிலும் ஆராயப்பட்டு வருகிறது. சிறுமியை விரைவில் கண்டுபிடிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன’ என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.