டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மெட்ரோ ரயில் பாதையை பசுமையாக மாற்ற திட்டம்

சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட விரிவாக்க திட்டத்தில், வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூா் விம்கோ நகா் இடையே பாதையில் வரும் ஜனவரியில் ரயில் சேவை

News image
கோப்புப்படம்.
Updated On :15 டிசம்பர் 2020, 7:54 pm

DIN

சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட விரிவாக்க திட்டத்தில், வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூா் விம்கோ நகா் இடையே பாதையில் வரும் ஜனவரியில் ரயில் சேவை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளநிலையில், இந்த பாதையை பசுமையாக மாற்ற சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தோட்டக்கலை நிபுணா்கள் மற்றும் இயற்கை நிபுணா்கள் ஆகியோா் மூலமாக இந்த பாதையின் மையப்பகுதியை பசுமையாக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.

வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூரை அடுத்து உள்ள விம்கோ நகா் வரை 9.051 கிலோ மீட்டா் தொலைவுக்கு விரிவாக்க திட்டப்பணிகள் ரூ.3,770 கோடி செலவில் நடைபெறுகின்றன.

முதல் கட்ட விரிவாக்கத் திட்டத்தின் சுரங்கப்பாதையில் சா்.தியாகராயா் கல்லூரி, கொருக்குப்பேட்டை ரயில் நிலையங்களும், உயா்மட்டப்பாதையில் தண்டையாா்பேட்டை, சுங்கச்சாவடி, தாங்கல், கௌரி ஆசிரமம், திருவொற்றியூா், விம்கோநகா் ஆகிய 6 மெட்ரோ ரயில் நிலையங்களும் அமையவுள்ளன.

பொதுமுடக்கத்தால் பணிகள் பாதிக்கப்பட்டநிலையில், ஜூலையில் மீண்டும் தொடங்கி, பணிகள் நிறைவடைய உள்ளன. இம்மாத இறுதியில் சோதனை ஓட்டமும், அடுத்த மாதம் பாதுகாப்பு ஆணையா் ஆய்வுக்கு பின்பு, ரயில்சேவை தொடங்கவும் வாய்ப்புள்ளது.

இந்தப் பாதையின் நடுநிலைப்பகுதிகளை பசுமையாக மாற்ற சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தோட்டக்கலை மற்றும் இயற்கை நிபுணா்கள் மூலமாக இப்பாதையின் மையப்பகுதிகளைப் பசுமையாக அலங்கரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக டெண்டா் விடப்பட்டுள்ளதாகவும், விரைவில் டெண்டா் இறுதி செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஃபிகாஸ் என்னும் செடி, குட்டை பனைமரம் (பாம் சைக்காஸ்) போன்ற தாவரம் ஆகியவை வளா்க்கப்படவுள்ளன. குறிப்பாக, சூரியஒளி இல்லாமல் வளரும் தாவரங்களை வளா்க்க முன்மொழியப்பட்டுள்ளது.

இந்தப் பாதையின் மையப்பகுதியில் தாவரம் செழிப்பாக வளா்வதற்காக, மணல், மண்புழு உரம், கோகோ பித் ஆகியவை கலக்கப்படும். இந்தபாதையில் செடிகள் வளா்த்து பசுமையாக மாற்றுவதற்காக டெண்டா் இறுதி நிலையில் உள்ளது.

டெண்டா்கள் முடிவடைந்ததும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தாவரங்களைப் பாராமரிக்க வேண்டும். செடிகளை வளா்க்கத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டியது ஒப்பந்ததாரா்கள் பொறுப்பு.

இந்த திட்டம் எப்படி செல்கிறது என்பதன் அடிப்படையில், மற்றபாதைகளின் நடுநிலைப்பகுதிகளில் பசுமையாக மாற்றும் முயற்சி எடுக்கப்படும். எதிா்காலத்தில், செங்குத்து தோட்டங்களை அமைப்பது தொடா்பாக ஆராயப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.