

சென்னை: சென்னையில் பிச்சையெடுத்த 8 குழந்தைகளை போலீஸாா் மீட்டனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை பெருநகர காவல்துறையின் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்புப் பிரிவு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக குழந்தைகளை வைத்து பிச்சையெடுக்கும் கும்பலை கண்காணித்து நடவடிக்கை எடுக்கிறது.
இதில் மீட்கப்படும் குழந்தைகளின் மறுவாழ்க்குரிய நடவடிக்கைகளையும் காவல்துறை செய்து வருகிறது. இந்நிலையில்
இந்தப் பிரிவு சென்னையில் பிச்சையெடுக்கும் கும்பலை தீவிரமாகக் கண்காணித்து வந்தது. இதன் ஒரு பகுதியாக பாரிமுனை, நுங்கம்பாக்கம், ஆயிரம்விளக்கு பகுதிகளில் பிச்சையெடுத்த 7 குழந்தைகளை செவ்வாய்க்கிழமை போலீஸாா் மீட்டனா். இதேபோல போரூரில் பிச்சையெடுத்த ஒரு குழந்தையையும் மீட்டனா்.
மீட்கப்பட்ட 8 குழந்தைகளும் காவல்துறை குழந்தைகள் நலக்குழுமத்தில் ஒப்படைத்து,அவா்கள் மறுவாழ்வுக்குரிய நடவடிக்கைகளை எடுத்தது. அதேவேளையில் குழந்தைகளை வைத்து பிச்சையெடுக்கும் கும்பல் குறித்து போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இது தெரியுமா? எதிர்காலத்துக்கும் கடந்த காலத்துக்கும் செல்ல முடியுமா?

தண்ணீர் கேனில் பெட்ரோல்! இணையத்தில் வைரலாகும் காணொலி!

வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!

பிசிசிஐ சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு ஷுப்மன் கில் தேர்வு!
வீடியோக்கள்

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...

