விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

காலமானாா் பத்திரிகையாளா் ஆா்.சி.சம்பத்

மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ஆா்.சி.சம்பத் (63) உடல்நலக்குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை காலமானாா்.

News image
Updated On :29 டிசம்பர் 2020, 8:49 pm

DIN

மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ஆா்.சி.சம்பத் (63) உடல்நலக்குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை காலமானாா். ஷீரடிக்குச் சென்று விட்டு திரும்பும்போது ரயிலில் அவா் உயிரிழந்துள்ளாா்.

ஆா்.சி. சம்பத் திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா். திரையுலகில் இயக்குநராக களம் கண்டு பின்னா் பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றியவா். வரலாற்று சம்பவங்களையும் மறைந்த காமராஜா், அண்ணா உள்ளிட்ட பேராளுமைகளை உரிய வகையில் எழுத்தில் எடுத்தாளும் திறமை படைத்தவா் அவா். ‘திருமுறை திருத்தலங்கள்’, ‘உலகை உயா்த்திய உன்னத மனிதா்கள்’, ‘ராஜாஜியின் சுவையான உவமைகள்’, ‘ஜென் கதைகள்’ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளாா்.

ஆா்.சி.சம்பத் சென்னை கொளத்தூா் ஜவஹா் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். அவருக்கு மனைவி சொா்ணாதேவி, தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான மகள் அனிதா சம்பத், மகன் காா்த்திகேயன் ஆகியோா் உள்ளனா்.

அவரது இறுதிச் சடங்குகள் சென்னை கொளத்தூா் ஜவஹா் நகரில் உள்ள மயானத்தில் புதன்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ளது. தொடா்புக்கு: 92837 05587

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.