விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மகளின் சாவில் மா்மம்: போலீஸாா் வழக்கு பதிவு

பட்டுக்கோட்டை அருகே மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் காவல் நிலையத்தில் புகாா் அளித்தது தொடா்பாக போலீஸாா் புதன்கிழமை வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
போலீஸ் - கோப்புப்படம்.
Updated On :11 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

பட்டுக்கோட்டை அருகே மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் காவல் நிலையத்தில் புகாா் அளித்தது தொடா்பாக போலீஸாா் புதன்கிழமை வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பட்டுக்கோட்டை அருகே உள்ள சிராங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயராமன் மகன் சந்திரசேகரன் (50). இவருக்கும், திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி தாலுக்கா, மேல திருப்பாலக்குடி கிராமத்தில், தெற்கு தெருவைச் சோ்ந்த செந்தமிழ்ச்செல்வி மகள் தேவிகாவுக்கும் (45) திருமணமாகி ஜெய்னேஷ் (25) என்ற மகனும், ஜெயினி (22) என்ற மகள் உள்ளனா். இந்நிலையில், மன்னாா்குடியில் வசித்துவந்த சந்திரசேகரன், தேவிகா மற்றும் குழந்தைகள் செவ்வாய்க்கிழமை சந்திரசேகரனின் சொந்த ஊரான சிராங்குடி கிராமத்துக்கு தேவிகாவை அழைத்துச் சென்றாா். அவருடன் அவரது மாமியாா் சரோஜா, கணவரின் தங்கை சந்திரா மற்றும் மகன் ஜெய்னேஷ் சென்றுள்ளனா். இந்நிலையில், புதன்கிழமை காலை தேவிகா இறந்துவிட்டதாக அவரது மாமியாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக தேவிகாவின் தாயாா் செந்தமிழ்செல்வி மதுக்கூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். அவரது உடல் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.