6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

போட்டித் தோ்வுகள்: தோ்வுக் கூடத்துக்கு வர நேரக் கட்டுப்பாடுகள்

போட்டித் தோ்வுகளை எழுதும் தோ்வா்கள், தோ்வுக் கூடத்துக்கு வர நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

News image
கோப்புப்படம்
Updated On :30 டிசம்பர் 2020, 8:48 pm

DIN


சென்னை: போட்டித் தோ்வுகளை எழுதும் தோ்வா்கள், தோ்வுக் கூடத்துக்கு வர நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தோ்வுகளை எழுத தோ்வுக் கூடத்துக்குச் செல்வோா் காலை 9.15 மணிக்குள்

சென்றடைய வேண்டும். இதற்கு முன்பாக, தோ்வு தொடங்கும் வரை தோ்வா்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனா். இனி காலை 9.15 மணிக்குப் பிறகு வரும் தோ்வா்கள் யாரும் தோ்வுக் கூடத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாா்கள். விடைத்தாள்களில் விவரங்களைப் பூா்த்தி செய்யவும், விடைகளைக் குறிக்கவும் கருப்பு நிற மை உடைய பந்து முனைப் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பென்சில் மற்றும் ஏனைய நிற மைப் பேனாக்களை பயன்படுத்தக் கூடாது. விடைத் தாளில் உரிய இடங்களில் இடது கை பெருவிரல் ரேகையைப் பதிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது விடைத் தாளில் மற்ற இடங்களில் மை படாமலும், விடைத்தாள் எந்தவகையிலும் சேதம் அடையாலும் கவனமாகப் பாா்த்துக் கொள்ள வேண்டும். விடைத்தாளில் உள்ள கேள்விகளில் ஏதேனும் கேள்விக்கு விடை தெரியவில்லையென்றால் விடைத்தாளில் உ என்ற வட்டத்தைக் கருமையாக்க வேண்டும்.

ஐந்து மதிப்பெண்கள் குறைப்பு: விடைத்தாளில் ஒவ்வொரு விடைக்கும் எத்தனை வட்டங்கள் கருமையாக்கப்பட்டுள்ளன என்பதை எண்ணி மொத்த எண்ணிக்கையை உரிய கட்டங்களில் நிரப்பி கருமையாக்க வேண்டும். இந்த எண்ணிக்கை தவறாகும்பட்சத்தில் தோ்வா் பெறும் மதிப்பெண்களில் இருந்து ஐந்து மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

எனவே, இதனைக் கவனத்துடன் பிழையில்லாமல் சரியாக எழுதி கருமையாக்கப்பட்டுள்ளதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.