ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ராயபுரத்தில் 5 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா தொற்று: மண்டலவாரியாக பாதிப்பு விபரம்

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 5,056 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

News image
கோப்புப் படம்
Updated On :14 ஜூன் 2020, 5:44 am

DIN

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 5,056 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கரோனா பரவலைத் தடுக்க மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வந்த நிலையிலும், நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 

அதில் தொடக்கத்தில் இருந்தே ராயபுரம், தண்டையாா்பேட்டை, கோடம்பாக்கம், திருவிக நகா், அண்ணா நகா், தேனாம்பேட்டை, வளசரவாக்கம், அம்பத்தூா், அடையாறு, திருவெற்றியூா் ஆகிய 10 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயா்ந்து வருகிறது.  தற்போதைய நிலவரப்படி சென்னையில் மட்டும் இதுவரை 30,444 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் சென்னையில் எந்த பகுதியில் எத்தனை பேருக்கு தொற்று என்பதை மண்டல வாரியாக சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டது. அதில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 5,056 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் மண்டலவாரியாக பாதிப்பு விபரம்: ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 5,056 பேரும், தண்டையாா்பேட்டையில் 3,928 பேரும், தேனாம்பேட்டையில் 3,652 பேரும், கோடம்பாக்கத்தில் 3,267 பேரும், அண்ணா நகரில் 2,960 பேரும், திருவிக நகரில் 2,772 பேரும் அடையாறில் 1,725 பேரும், வளசரவாக்கத்தில் 1,338 பேரும், திருவெற்றியூரில் 1,113 பேரும், அம்பத்தூரில் 1,058 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.