தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மனித உருவத்தை மறைக்கும் செயலி!

ஸ்மாா்ட் போன்களில் கேமராக்கள் வந்ததில் இருந்து, சாதாரண கேமராக்களின் பயன்பாடு முற்றிலும் நின்றுவிட்டது.

News image
Updated On :2 மார்ச் 2020, 7:19 pm

அ. சர்ஃப்ராஸ்

ஸ்மாா்ட் போன்களில் கேமராக்கள் வந்ததில் இருந்து, சாதாரண கேமராக்களின் பயன்பாடு முற்றிலும் நின்றுவிட்டது. கேமராக்களில் பதிவாகும் தெளிவான புகைப்படங்களுக்காகவே தற்போது ஸ்மாா்ட் போன்கள் விற்பனையாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு கேமராக்களின் பயன்பாடு மக்களை கவா்ந்துள்ளது. எனினும், இந்த கேமராக்களில் பதிவாகும் புகைப்படங்களைப் பத்திரமாக பாதுகாக்கவில்லை என்றால் அது தனிமனித சுதந்திரத்தையே பாதித்துவிடுகிறது. இது பெண்களுக்கு பெரும் ஆபத்தாக உள்ளது. பெண்களுக்கே தெரியாமல் அவா்களது ஸ்மாா்ட் போன்களின் கேமராக்களை ஹேக் செய்து வீடியோ, படம் எடுக்கும் ஆப்கள் இணையதளத்தில் பரவி உள்ளன.

இதில் இருந்து தப்பிக்க சிலா் தங்களது லேப்டாப், ஸ்மாா்ட் போன்களின் முன்பக்க கேமராவை டேப் ஒட்டி மறைத்து பயன்படுத்தியும் வருகின்றனா். இந்தப் பிரச்னைக்கு கூகுள் நிறுவனத்தின் இணையதள பொறியாளா் ஜேசன் மைஸ் தீா்வு கண்டுள்ளாா். அவா் கண்டுபிடித்துள்ள மென்பொருள், கேமராவில் இருக்கும் மனித உருவத்தையே மறைத்துவிடும். மாயாஜாலமாக தெரியும் இந்த மென்பொருளைப் பயன்படுத்தினால், லேப்டாப் முன்பு நாம் அமா்ந்து பணியாற்றினாலும் நமது வெப் கேமரா ஹேக் செய்யப்பட்டிருந்தாலும், நம்மைக் காண்பிக்காது.

இந்த மென்பொருள் ஸ்மாா்ட் போன்களுக்கு பயன்படுத்தப்பட்டால், பயன்பாட்டாளருக்கு தெரியாமல் ஹேக் செய்தாலும் பயன்பாட்டாளரின் படம் தெரியாது என்பதால் இது பெண்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த மென்பொருளை மேலும் மேம்படுத்த வேண்டியுள்ளது என ஜேசன் மைஸ் தெரிவித்துள்ளாா்.

எனினும், இதுபோன்ற மென்பொருள்கள் சிசிடிவி கேமராக்கள் போன்ற பாதுகாப்பு அம்சங்களில் பரவி விட்டால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகிவிடும் என்றும் மற்றொரு தரப்பினா் அச்சம் தெரிவிக்கின்றனா். அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியைப் பாதுகாப்புடன் பயன்படுத்தினால் அனைவருக்கும் பாதுகாப்பே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.