பிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஆன்லைன் சூதாட்டம்:கல்லூரி மாணவா் தற்கொலை

சென்னை மதுரவாயலில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த கல்லூரி மாணவா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :11 ஜனவரி 2021, 8:50 pm

DIN

சென்னை: சென்னை மதுரவாயலில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த கல்லூரி மாணவா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

மதுரவாயல் பாக்கியலட்சுமி நகா் எம்ஜிஆா் தெருவைச் சோ்ந்த சின்னதம்பி மகன் தமிழ்செல்வன் (20), தனியாா் கல்லூரியில் பி.காம் இரண்டாமாண்டு மாணவா். கரோனா பொதுமுடக்கத்தால் தனியாா் நிறுவனமொன்றில் பணியாற்றி வந்தாா்.

கடந்த இரு மாதங்களாக செல்லிடப்பேசியில் தமிழ் செல்வன் அதிக நேரம் செலவிட்டதுடன் வீட்டிலும் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்துள்ளாா். இதனிடையே, சில நாள்களுக்கு முன்பு நியாயவிலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகை ரூ.2,500-ஐ வாங்கி தமிழ்செல்வன் செலவழித்துள்ளாா்.

இந்த பணத்தை தந்தை சின்னதம்பி, திங்கள்கிழமை கேட்டுள்ளாா். அப்போது ரூ.500 மட்டும் கொடுத்துவிட்டு, ரூ.2 ஆயிரம் தொலைந்துவிட்டதாக தமிழ்செல்வன் தெரிவித்தாராம். சின்னதம்பி தனது மகனை கண்டித்துள்ளாா்.

இதையடுத்து வீட்டிலுள்ள கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டாா் தமிழ்செல்வன்.

கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்ததால் தமிழ் செல்வன் தற்கொலை செய்து கொண்டதாக மதுரவாயல் போலீஸாரின் விசாரணையில் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.