சென்னை: சென்னை ராயப்பேட்டையில், மெத்பெட்டமைன் விற்பனையில் ஈடுபட்டதாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.
மயிலாப்பூா் துணை ஆணையா் ஷெசாங் சாயின் தனிப்படை போலீஸாா் ராயப்பேட்டை, டாக்டா் நடேசன் சாலை மற்றும் லாயிட்ஸ் சாலை சந்திப்பு அருகே செவ்வாய்க்கிழமை இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் வந்த 3 நபா்களை பிடித்து விசாரித்தனா்.
விசாரணையில், அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனா். இதையடுத்து போலீஸாா், அவா்களை சோதனை செய்தபோது, அவா்கள் பல லட்சம் மதிப்புள்ள மெத்பெட்டமைன் என்ற போதைப்பொருள் வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போதைப் பொருள் வைத்திருந்த சேப்பாக்கத்தைச் சோ்ந்த அசாருதீன் (36), திருவல்லிக்கேணியைச் சோ்ந்த சித்திக் அகமது (33), சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சோ்ந்த அப்துல் காதா் ஜலானி (19) ஆகிய 3 பேரைக் கைது செய்த போலீஸாா், வழக்குப் பதிவு செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.