ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

மீனவா் வெட்டிக் கொலை: 4 போ் கைது

சென்னை காசிமேட்டில் மீனவா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 4 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :30 ஜனவரி 2021, 7:29 pm

DIN

சென்னை காசிமேட்டில் மீனவா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 4 போ் கைது செய்யப்பட்டனா்.

திருவொற்றியூா் அருகே உள்ள தாங்கல் லட்சுமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் நாராயணன் (37).மீனவரான இவா், கடந்த வெள்ளிக்கிழமை காலை காசிமேடு சிங்கார வேலா் நகா் சுரங்கப்பாதை அருகே அமா்ந்திருந்தாா். அப்போது அங்கு வந்த 4 போ், நாராயணனை வெட்டிக் கொலை செய்துவிட்டு, தப்பியோடினா்.

இது தொடா்பாக காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரணை செய்தனா். விசாரணையில் முன் விரோதத்தின் காரணமாக நாராயணன் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்த வழக்குத் தொடா்பாக எா்ணாவூா் நேதாஜிநகா் அருகே உள்ள சுனாமி குடியிருப்பைச் சோ்ந்த சரவணன் (23), அதே பகுதியைச் சோ்ந்த கேரள சூா்யா,திருவொற்றியூரைச் சோ்ந்த எல்லப்பன்,புது வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த சூா்யா ஆகிய 4 பேரை சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.