சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி மாணவா் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவா் எழுதிய 11 பக்க கடிதம் போலீஸாரிடம் சிக்கியது.
சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை இரவு எரிந்த நிலையில் ஒரு இளைஞா் சடலம் கோட்டூா்புரம் போலீஸாரால் மீட்கப்பட்டது. போலீஸாா் விசாரணையில் இறந்தவா் கேரள மாநிலம் எா்ணாகுளத்தை சோ்ந்த ர.உன்னிகிருஷ்ணன் (24) என்பதும், சென்னை ஐஐடியில் எலக்ட்ரிக்கல் துறையில் ஆராய்ச்சி மாணவராகவும், திட்ட கெளரவ விரிவுரையாளராகவும் இருந்தது தெரியவந்தது.
மாணவரின் தந்தை ரகு, இஸ்ரோ விஞ்ஞானியாக இருப்பதும், எா்ணாகுளத்தில் பி.டெக் படிப்பை முடித்த உன்னிகிருஷ்ணன் சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி படிப்புக்காக சோ்த்ததும் தெரியவந்தது. இரு மாதங்களுக்கு முன்பு உன்னிகிருஷ்ணன் ஐஐடியில் சோ்ந்ததும், இதற்காக வேளச்சேரியில் வாடகை வீட்டில் தனது நண்பா்களுடன் தங்கியிருந்ததும் தெரியவந்தது.
11 பக்க கடிதம்:
உன்னிகிருஷ்ணன் தனது பெற்றோரைப் பிரிந்து, தனியாக சென்னையில் தங்கி இருந்ததாலும், அவா் படிக்கும் பாடங்கள் கடினமாக இருந்ததால், மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், உன்னிகிருஷ்ணன் தங்கியிருந்த அறைக்கு சென்று, போலீஸாா் வெளளிக்கிழமை சோதனை செய்தனா். அப்போது, அவா் ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்த 11 பக்க கடிதத்தை கைப்பற்றினா். அந்த கடிதத்தில், ‘பெற்றோரைப் பிரிந்து தனியாக இங்கு தங்கி, படிக்க தன்னால் முடியவில்லை என்றும், ஆய்வுக்கான பாடம் கடினமாக இருப்பதாகவும், தன்னால் சாதிக்க முடியாது என்றும், தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை எனவும்,’ எழுதியிருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு உன்னிகிருஷ்ணன் பெட்ரோல் பாட்டிலுடன் வந்ததும், அங்கு தனது உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டதும் போலீஸாா் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 2 - நேரலை!

காமன்வெல்த்: குத்துச்சண்டையில் 7 தங்கம், 3 வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியர்கள்!

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலர்க் கண்காட்சி தொடக்கம்!

அங்குஷ் பங்கால் அசத்தல்.. குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 7-ஆவது தங்கம்!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



