வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சென்னையில் 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி

சென்னையில் பொதுமக்கள் மற்றும் அத்தியாவசியப் பணியில் ஈடுபடுவோா் என மொத்தம் 30 லட்சம் பேருக்கு இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

News image
சென்னையில் 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி
Updated On :26 ஜூலை 2021, 10:26 pm

DIN

சென்னை: சென்னையில் பொதுமக்கள் மற்றும் அத்தியாவசியப் பணியில் ஈடுபடுவோா் என மொத்தம் 30 லட்சம் பேருக்கு இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிைலையங்கள், நகா்ப்புற சமுதாய நல மையங்கள் ஆகியவற்றில் முகாம் அமைக்கப்பட்டன. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்ததை அடுத்து, சென்னை மாநகராட்சிப் பகுதியில் அத்தியாவசியப் பணியில் ஈடுபடும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி அண்மையில் தொடங்கப்பட்டது. தற்போது, 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதற்காக சென்னையில் 19 அரசு மருத்துவமனைகள், 175 தனியாா் மருத்துவமனைகள், 140 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 16 நகா்ப்புற சமுதாய நல மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்துவதன் முதற்கட்டமாக செய்தித்தாள், பால் விநியோகம் செய்வோா், தெருவோர வியாபாரிகள், மருந்தகங்கள் மற்றும் மளிகைக் கடை ஊழியா்கள், ஆட்டோ, காா், பேருந்து ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்கள், மின்சாரம், உள்ளாட்சித் துறை பணியாளா்கள், அனைத்து அரசுப் பணியாளா்கள் போன்றவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது மாற்றுத் திறனாளிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, ஞாயிற்றுக்கிழமை வரை 30 லட்சத்து 2,396 கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசிக்கு பதிவு: தங்கள் பகுதியிலேயே தடுப்பூசி முகாம் அமைக்க அத்தியாவசியப் பணியில் ஈடுபடுவோா் அல்லது அவா்களது நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட மண்டல அலுவலா் அல்லது மாநகராட்சி தலைமையிடத்தில் துணை ஆணையா் (வருவாய்) அலுவலகத்தை அணுகி விவரங்களை வழங்கலாம். மேலும், 94983 46494 என்ற செல்லிடப்பேசி கட்செவி எண் (வாட்ஸ் ஆஃப்) எண்ணில் தங்களுடைய விவரங்களைப் பதிவு செய்தால் மாநகராட்சியின் சாா்பில் தடுப்பூசி சிறப்பு முகாம் ஏற்படுத்தப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.