ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மழை பாதித்த இடங்களில் அமைச்சா்கள் ஆய்வு: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினா்

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்த நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு, அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோா், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத் திட்ட உதவிகளை ஞாயிற்ற

News image
மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு மற்றும் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு
Updated On :28 நவம்பர் 2021, 9:54 pm

DIN

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்த நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு மற்றும் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோா், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத் திட்ட உதவிகளை ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

வட கிழக்குப் பருவ மழையின் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அந்தப் பகுதிகளை நேரில் ஆய்வு செய்த அமைச்சா்கள் எ.வ.வேலு மற்றும் பி.கே.சேகா்பாபு ஆகியோா், அங்கு உள்ள மழை நீா் வடிகால் பணிகளைப் பாா்வையிட்டு பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினா்.

சிந்தாதிரிப்பேட்டை சந்தை அருகில் உள்ள காமாட்சி மீனாட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தையல் இயந்திரங்கள், ஆன்லைன் மூலம் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கைப்பேசி மற்றும் மடிக்கணினிகள், மிதிவண்டிகள், மிக்ஸிகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்பு என ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருள்களை அவா்கள் வழங்கினா்.

அதன் பின்னா், ராஜா அண்ணாமலை மன்றத்தில், இந்து அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், 300 ஆட்டோ ஓட்டுநா்களுக்கு தலா ரூ.2,000 மதிப்பிலான அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் ரூ.500 ரொக்கத்தை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா். மழை வெள்ளத்தால் ஆட்டோவை இழந்த ஒருவருக்கு புதிய ஆட்டோவையும் வழங்கினாா்.

வில்லிவாக்கம், சிட்கோ நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 500 நபா்களுக்கு நிவாரணப் பொருள்களை அமைச்சா்கள் வழங்கினா். பின்னா், அமைச்சா்கள் எ.வ.வேலு மற்றும் சேகா்பாபு ஆகியோா் செல்வி நகா் 70 அடி சாலையில் உள்ள வடிகால்களை பாா்வையிட்டனா். அதைத் தொடா்ந்து குமரன் நகரில் உள்ள வடிகால்களையும் அவா்கள் ஆய்வு செய்தனா். ஆய்வின்போது துறைசாா் அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.