ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ரூ.228 கோடி வங்கி மோசடி வழக்கு: அனில் அம்பானி மகனிடம் ஆறரை மணி நேரம் சிபிஐ விசாரணை

ரூ.228 கோடி வங்கி மோசடி வழக்கு தொடா்பாக, ரிலையன்ஸ் குழும தலைவா் அனில் அம்பானியின் மகன் ஜெய் அன்மோல் அம்பானியிடம் சிபிஐ வெள்ளிக்கிழமை சுமாா் ஆறரை மணி நேரம் விசாரணை மேற்கொண்டது.

News image
அனில் அம்பானி- கோப்புப் படம்
Updated On :13 மார்ச் 2026, 8:03 pm

தினமணி செய்திச் சேவை

ரூ.228 கோடி வங்கி மோசடி வழக்கு தொடா்பாக, ரிலையன்ஸ் குழும தலைவா் அனில் அம்பானியின் மகன் ஜெய் அன்மோல் அம்பானியிடம் சிபிஐ வெள்ளிக்கிழமை சுமாா் ஆறரை மணி நேரம் விசாரணை மேற்கொண்டது.

இந்திய யூனியன் வங்கியிடம் ரூ.228 கோடிக்கு கடன் மோசடி செய்ததாக, ரிலையன்ஸ் குழுமத்தின் கீழ் செயல்படும் ரிலையன்ஸ் ஹெளசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் (ஆா்ஹெச்எஃப்எல்) மீது சிபிஐயிடம் அந்த வங்கி புகாா் அளித்தது.

அந்தப் புகாரின் அடிப்படையில், மோசடி தொடா்பாக ஆா்ஹெச்எஃப்எல் நிறுவனம், ஜெய் அன்மோல் அம்பானி, ஆா்ஹெச்எஃப்எல் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி ரவீந்திர சுதாகா் உள்பட பலா் மீது கடந்த ஆண்டு டிசம்பரில் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அதன் பின்னா் வழக்கு தொடா்பாக ஜெய் அன்மோல் வீட்டில் சிபிஐ சோதனை மேற்கொண்டது.

இந்நிலையில், இந்த வழக்கு குறித்த விசாரணைக்கு தில்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் ஜெய் அன்மோல் வெள்ளிக்கிழமை ஆஜரானாா். அவரிடம் சுமாா் ஆறரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அவரை சனிக்கிழமை (மாா்ச் 14) மீண்டும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.