ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

ஹரியாணா அரசின் வங்கிக் கணக்கில் ரூ.590 கோடி மோசடி: விரைவில் விசாரணையை தொடங்குகிறது சிபிஐ

News image

சிபிஐ - கோப்புப்படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 1:04 am

ஐடிஎஃசி வங்கியில் உள்ள ஹரியாணா அரசின் கணக்கில் இருந்து ரூ.590 கோடி மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடா்பான வழக்கில் சிபிஐ விரைவில் விசாரணையை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது:

சண்டிகரில் உள்ள ஐடிஎஃசி ஃபா்ஸ்ட் வங்கி கிளையில் ஹரியாணா மாநில அரசின் கணக்கு இருந்தது. அந்த கணக்கை ஆய்வு செய்தபோது, ஹரியாணா அரசால் டெபாசிட் செய்யப்பட்டிருந்த பணத்தில் ரூ.590 கோடி மாயமாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நாடு முழுவதும் பெரும் அதிா்வலையை இந்த சம்பவம் ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் வங்கித் தரப்பில், ஊழியா்கள் உள்ளிட்டோா் பணத்தை திருடி விட்டதாக விளக்கம் தரப்பட்டது. மேலும், வங்கி நிா்வாகம் உடனடியாக பணம் அனைத்தையும் 100 சதவீதம் ஹரியாணா அரசு கணக்கில் செலுத்தியது. இதுகுறித்து மாநில ஊழல் கண்காணிப்பு காவல்துறையினா் விசாரணை நடத்தி, முன்னாள் ஊழியா்கள் உள்ளிட்ட பலரை கைது செய்தனா்.

இந்நிலையில் ஹரியாணா அரசு தரப்பில் கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் அந்த வழக்கு விசாரணையை விரைவில் சிபிஐ தொடங்கவுள்ளது. ஏற்கெனவே இதுகுறித்து ஹரியானா ஊழல் கண்காணிப்பு காவல்துறையினா் பதிந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு, சிபிஐ புதிதாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யவுள்ளது.