தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!விஜய்க்கு ஆதரவு? சில மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரைபாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
/

கரோனா தொற்றுக்கு ஆயுர்வேத மருந்து: ஐசிஎம்ஆர் ஒப்புதல்

கரோனா தொற்றுக்கு ஆயுர்வேத மருத்தான க்ளெவிரா மாத்திரை,  சிரப்பை அபெக்ஸ் லெபாரட்டரீஸ் பிரைவெட் லிமிடெட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

Updated On :22 ஏப்ரல் 2021, 4:44 am IST


சென்னை:  கரோனா தொற்றுக்கு ஆயுர்வேத மருத்தான க்ளெவிரா மாத்திரை,  சிரப்பை அபெக்ஸ் லெபாரட்டரீஸ் பிரைவெட் லிமிடெட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இது தொடர்பாக நிறுவன இயக்குநர்கள் சுபாஷினி வணங்காமுடி, விசாகம் வணங்காமுடி, மேலாளர் மருத்துவர் ஆர்தர் பால் ஆகியோர் சென்னையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:  
லேசான, மிதமான கரோனா தொற்றுக்கு அபெக்ஸ்  நிறுவனம் க்ளெவிரா  மாத்திரை, சிரப்பை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த மருந்து முதல்கட்டமாக ஆய்வகத்திலும், விலங்குகளிடமும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சிறந்த முடிவு வந்ததால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 கரோனா நோயாளிகளுக்குக் கொடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. மருந்து கொடுக்கப்பட்ட 5 நாள்களில் 86 சதவீத தொற்றும், 10 நாள்களில் 100 சதவீத தொற்றும் குணமாகியுள்ளது.
இந்த மருந்துக்கு இந்திய மருத்துவம், ஆராய்ச்சி கழகமும் ( ஐசிஎம்ஆர்) ஆயுஷ் அமைச்சகமும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மருத்தைப் பொதுமக்கள் அச்சமின்றி கரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தலாம்.  அதன்படி, க்ளேவிரா மாத்திரையைக் காலை மற்றும் இரவு உணவைச் சாப்பிட்ட பின்பு உட்கொள்ளவேண்டும். அதேபோல சிரப்பை காலை மற்றும் மாலையில் 10 எம்எல் அளவுக்குப் பருகவேண்டும். 
மாத்திரை மற்றும் சிரப்பின் விலை மிகவும் குறைவானது. இந்த மருந்து கல்லீரல் மற்றும் சிறுநீரகத்துக்கு பாதுகாப்பானது. எந்த பக்க விளைவுகளும் இல்லை. ஒரு மாத்திரையின் விலை ரூ.11 ஆகும். மருத்துவர்களின் பரிந்துரையின்படி மருந்தை உட்கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசுகள் க்ளெவிரா மருந்தை கொள்முதல் செய்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும்.
முன்னதாக கடந்த 2017-ம் ஆண்டு டெங்கு காய்ச்சல் பரவல் அதிகமாக இருந்தபோது, க்ளெவிரா மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. உரிய பரிசோதனைகளுக்குப்பின் டெங்கு பாதித்தவர்களுக்கு கொடுக்கப்பட்டது. நோயாளிகள் டெங்குவில் இருந்து விரைவாக குணமடைந்தனர். க்ளெவிரா மருந்து டெங்குகாய்ச்சலுக்கு சிறந்த மருந்தாக இருந்தது. இந்நிலையில், க்ளெவிரா மருந்து தற்போது கரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகிறது.
இந்த மருந்தானது பப்பாளி, காட்டு வேம்பு, நில வேம்பு, காட்டுப் பேய் புடல், கோரைக் கிழங்கு, இஞ்சி, மிளகு, பற்படாகம், சிந்திவ் கொடி போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது என்றனர்.
நிகழ்ச்சியில் அலோபதி மருத்துவர் சிஎம்கே ரெட்டி, ஆயுர்வேதா மருத்துவர் தர்மேஷ் குபேந்திரன், சித்த மருத்துவர் சதீஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.