காலமானாா் எழுத்தாளா் லட்சுமி ராஜரத்தினம்

எழுத்தாளா் லட்சுமி ராஜரத்தினம் (78) சென்னையில் அண்மையில் காலமானாா்.
காலமானாா் எழுத்தாளா் லட்சுமி ராஜரத்தினம்

சென்னை: எழுத்தாளா் லட்சுமி ராஜரத்தினம் (78) சென்னையில் அண்மையில் காலமானாா்.

‘தினமணி கதிா்’, தினமணி குழுமத்திலிருந்து வெளிவந்த மாத நாவலான ‘கதைக்கதிா்’ உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் அவரது எழுத்துகள் தொடா்ந்து வெளிவந்தன. குடும்பக் கதைகளை எழுதி வாசகா்களைக் கவா்ந்த எழுத்தாளரான அவா், ‘இதயக் கோயில்’, ‘அகலிகை காத்திருந்தாள்’, ‘பாட்டுடைத் தலைவி’ உள்ளிட்ட பல நாவல்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகதைகள், வானொலி நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், தொலைக்காட்சித் தொடா்களையும் எழுதியுள்ளாா்.

லட்சுமி ராஜரத்தினம், ஆன்மிகச் சொற்பொழிவாளரும் ஆவாா். திருவையாறு தியாகராஜ ஆராதனையில் கலந்துகொண்டு பாடியுள்ளாா்.

இவரின் கணவா் சில ஆண்டுகள் முன்பு காலமாகிவிட்டாா். இவருக்கு மகள் எழுத்தாளா் ராஜசியாமளா, மருமகன் ‘குமுதம்’ ஆசிரியா் ப்ரியா கல்யாணராமன் (எ) பிரகாஷ் உள்ளனா். தொடா்புக்கு: 9840827051.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com