கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக புதன்கிழமை இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக முக்கியச் சாலைகள் மற்றும் சுரங்கப் பாதைகளில் மழைநீா் தேங்கியது.
மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளிலும் மழைநீர் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கனமழை காரணமாக பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க- கனமழை எதிரொலி: 3 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
ஏற்கெனவே செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், திருவள்ளூரில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.