ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில்கள் இன்று நள்ளிரவு 12 மணிவரை இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் புதன்கிழமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட செய்தியில்,
“தொடர் விடுமுறை நாள்களை ஒட்டி வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இன்று நள்ளிரவு 12 மணிவரை நீட்டிக்கப்படுகின்றன.
நெரிசல்மிகு நேரங்களில் மாலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரை 5 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். இரவு 10 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.
மேற்கண்ட மெட்ரோ ரயில் நீட்டிப்பு இன்று ஒருநாள் மட்டுமே அமலில் இருக்கும்.”