ஆயுத பூஜை: சென்னையில் வெளியூர் பேருந்துகள் நிற்கும் இடங்கள்; செல்லும் வழித்தடங்கள்

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் சென்னையில் 3 இடங்களில் தற்காலிக சிறப்பு பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆயுதபூஜையை முன்னிட்டு வெளியூர் செல்லும் பொதுமக்கள் வசதிக்காகவும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் சென்னையில் 3 இடங்களில் தற்காலிக சிறப்பு பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு ஏராளமான மக்கள் பயணம் செய்வார்கள், பயணிகளின் வசதிக்காக சென்னையில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (டிஎன்எஸ்டிசி) மற்றும் மாநில விரைவு போக்குவரத்து கழகம் (எஸ்இடிசி) மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

கடந்த வருடங்களில் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளுக்காக பல்வேறு இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த ஆண்டு ஆயுத பூஜை விழாவிற்காக 12.10.2021 மற்றும் 13.10.2021 ஆகிய தேதிகளில் 3 இடங்களில் இருந்து கீழே காட்டப்பட்டுள்ளபடி சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து பயணிகளும் மேற்கண்ட ஏற்பாடுகளை கவனத்தில் கொள்ளவும், அதற்கேற்ப தங்கள் பயணத்தை திட்டமிட்டு அனைத்து சாலைகளிலும் சுமூகமான போக்குவரத்துக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கோயம்பேடுலிருந்து பயணிகள் சிறப்பு பேருந்து நிலையங்களை அடைய எம்டிசி சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்கிறது. 

பயணிகள் தங்கள் பயணத்தின் போது அனைத்து கோவிட் விதிமுறைகளையும் பின்பற்றவும் மற்றும் தவறாமல் முகக்கவசம் அணியவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

டிஎன்எஸ்டிசி மற்றும் ஆம்னி பேருந்துகள் கீழ்காணும் வழித்தடங்களில் இயக்கப்படும்.

1)  கோயம்பேடிலிருந்து பல்வேறு இடங்களுக்குச் செல்லும் அனைத்து டிஎன்எஸ்டிசி பேருந்துகளும் தாம்பரம் செல்ல 100 அடி சாலையில் செல்லாது, அதற்கு பதிலாக பூந்தமல்லி உயர் சாலை, மதுரவாயல் புறவழிச்சாலை, மதுரவாயல் சுங்கச்சாவடி வழியாக தாம்பரம் மற்றும் பெருங்குளத்தூர் சென்றடையும்.

2)  வழக்கம் போல் எஸ்இடிசி பேருந்துகள் பூந்தமல்லி உயர் சாலை, வானகரம், நசரத்பேட்டை, வெளி வளைய சாலை வழியாக சென்று வண்டலூரைச் சென்றடையும். இந்த பேருந்துகள் தாம்பரம் மற்றும் பெருங்குளத்தூர் வழியாக செல்லாது.

3) இதேபோல் கோயம்பேட்டிலிருந்து பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் பூந்தமல்லி உயர் சாலை, மதுரவாயல் புறவழிச்சாலை, மதுரவாயல் சுங்கச்சாவடி மற்றும் பெருங்குளத்தூர் வழியாக செல்ல வேண்டும்.

4)  இசிஆர் நோக்கி ஆம்னி பேருந்துகள் 100 அடி சாலை, கத்திப்பாரா, கிண்டி, சர்தார் படேல் சாலை (ஓஎம்ஆர், இசிஆர்) வழியாக அனுமதிக்கப்படும். இந்தப் பேருந்துகள் காவல்துறையால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டிக்கர்களைக் ஒட்டிக் கொண்டு செல்ல வேண்டும்.

5)   ஆம்னி பேருந்துகள் 100 அடி சாலை, சிஎம்ஆர்எல், ஆலந்தூர் மெட்ரோ, கே.கே.நகர் முன் பூந்தமல்லி உயர் சாலை ஆகியவற்றில் பயணிகளை ஏற்றுவதைத் தவிர்க்க வேண்டும், அதற்கு பதிலாக அந்த பயணிகளை கோயம்பேடு/ தாம்பரம் அல்லது வண்டலூரிலிருந்து ஏறுமாறு ஏற்பாடுகள் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

6)  கோயம்பேடுவிலிருந்து அனைத்து பயணிகளுடன் புறப்படும் ஆம்னி பேருந்துகள் தாம்பரம் மற்றும் பெருங்குளத்தூரைத் தவிர்த்து வண்டலூரை அடைய பிஎச் சாலை, வானகரம், நசரத்பேட்டை, வெளி வளைய சாலை வழியாக செல்ல வேண்டும்.

பயணிகள் அனைவரும் சென்னைப் போக்குவரத்து காவல்துறையினர் செய்த ஏற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com