எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

வில்லியம் ஷேக்ஸ்பியர் ஆண்டனியும் கிளியோபாட்ராவும்

வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதிய 37 நாடகங்களில் 1606 - 1607-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட ஆண்டனி, கிளியோபாட்ரா மிகவும் பிரபலமானது.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2026, 6:21 pm IST

வில்லியம் ஷேக்ஸ்பியர் ஆண்டனியும் கிளியோபாட்ராவும்- தமிழில்: மோகன ரூபன், பக். 224, ரூ. 220, அபிநயா பிரசுரம், சென்னை-600 017. ✆ 97910 71218.

வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதிய 37 நாடகங்களில் 1606 - 1607-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட ஆண்டனி, கிளியோபாட்ரா மிகவும் பிரபலமானது.

ரோமப் பேரரசின் உயர்நிலை அதிகார மையமாக இருந்த டிரயம்வேர் அமைப்பின் மூன்று உறுப்பினர்களில் ஒருவர் ஆண்டனி. ஜூலியஸ் சீசர் கொலை செய்யப்பட்ட பிறகு அவரது வளர்ப்பு மகனான அக்டேவியஸ் சீசர் ரோமப் பேரரசின் மன்னரானார். ஜூலியஸ் சீசரால் போரில் தோற்கடிக்கப்பட்டு உயிரிழந்த பாம்பேயின் மகன் செக்ஸ்டஸ் பாம்பே ரோமப் பேரரசை அச்சுறுத்தி வந்தார். இதனிடையே, எகிப்து நாட்டை வெற்றி கொள்ள ஆண்டனி ரோமானியப் படையுடன் அனுப்பப்பட்டார்.

அப்போது, எகிப்தை ஆண்ட மன்னர் தாலமியின் மகளான கிளியோபாட்ராவின் அழகில் மயங்கி அவள் மீது ஆண்டனி காதல் கொண்டார். இதனால், தான் பொறுப்பேற்ற கடமையை மறந்து காதலில் திளைத்ததால், ரோம் நகரில் மக்களிடையே ஆண்டனிக்கு எதிராக அதிருப்தி உருவானது.

அவர் ரோமுக்கு திரும்பிய போது, அங்கு நிலவிய அரசியல் சூழல், ஆண்டனி - ஆக்டேவியா திருமணம், ஆண்டனி திருமணத்தால் கிளியோபாட்ரா எடுக்கும் முடிவுகள், ரோமப் பேரரசுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கடற்கொள்ளையர்கள், இறுதியில் ஆண்டனி, கிளியோபாட்ராவின் மரணங்கள் என பலமுனை நிகழ்வுகளை வில்லியம் ஷேக்ஸ்பியர் திறம்பட எடுத்துக்காட்டியுள்ளார்.

இந்த நாடகத்தை அதன் மூல வடிவில் வாசிக்கும் போது ஏற்படும் அனுபவம் சிறிதும் குறையாமல் தமிழில் எழுத்தாளர் மோகன ரூபன் மொழிபெயர்த்துள்ளார். இவர் ரோமியோ ஜூலியட், மெர்ச்சென்ட் ஆஃப் வெனிஸ், ஹாம்லெட், கிங் லியர், மாக்பத், ஒத்தெல்லோ ஆகிய நாடகங்களையும் மொழிபெயர்த்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.