எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

போராட்டத்தின் முதல் நாளிலிருந்தே மாணவர்களுகாக துணைநிற்கும் சிஜேபி: சௌரவ் தாஸ்

போராட்டத்தின் முதல் நாளிலிருந்தே மாணவர்களுகாக சிஜேபி துணை நிற்பதாக அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் பேசியது பற்றி...

News image

சிஜேபி செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் - படம் - ஏஎன்ஐ

Updated On :3 ஆகஸ்ட் 2026, 6:22 pm IST

போராட்டத்தின் முதல் நாளிலிருந்தே மாணவர்களுகாக சிஜேபி துணை நிற்பதாக அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ், திங்கள்கிழமை (ஆகஸ்ட் 3) பேசியுள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற குற்றப் பின்னணி இல்லாத 18 வயதுக்குக் குறைவான மாணவர்களை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் ஜூலை 28 அன்று உத்தரவிட்டிருந்தது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றாமல் மாநில அரசுகள் மாணவர்களைக் கைது செய்து வருவதாக குற்றம் சாட்டிய சிஜேபி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை இன்று விசாரித்த இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, “சிஜேபி போராட்ட வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. முந்தைய தீர்ப்பில் பயன்படுத்திய குற்றப் பின்னணி என்ற சொல் கொடிய மற்றும் மோசமான குற்றங்களை செய்தவர்களைக் குறிக்கும்” என்று தெளிவுபடுத்தியுள்ளது.

இதுகுறித்து சிஜேபி செய்தித் தொடர்பாளர் பேசியதாவது:

கடந்த ஜூலை 25 ஆம் தேதி, இளைஞர்களுக்குக் கிடைத்த வெற்றிக்குப் பிறகு, அரசாங்கள் எங்களுக்கு சில உத்தரவாதங்களை அளித்தது. அவற்றில் முக்கியமானவை, போராட்டக்காரர்களுக்கு எதிராக ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட அனைத்து முதல் தகவல் அறிக்கைகளும் திரும்பப் பெறப்படும் என்பதும், எதிர்காலத்தில் எந்தவொரு போராட்டக்காரர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாது என்று எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கப்படும் என்பதுமாகும்.

அதற்குப் பிறகும், பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் போராட்டக்காரர்கள் மீதான முதல் தகவல் அறிக்கைகள், அவர்கள் கைது செய்யப்பட்டது போன்ற பல தகவல்களை நாங்கள் பெற்றோம். போராட்டத்தின் முதல் நாளிலிருந்தே மாணவர்களுடன் சிஜேபி துணை நின்று வருகிறது.

இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்பே, நாங்கள் போராட்டக்காரர்களுக்கு சட்ட மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கினோம். எதிர்காலத்திலும் அதைத் தொடர்வோம். முதல் தகவல் அறிக்கைகளைத் திரும்பப் பெறுவது குறித்து உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது என்று சௌரவ் தாஸ் தெரிவித்தார்.

Summary

CJP spokesperson Sourav Das stated on Monday (August 3) that the party has stood in support of the students since the very first day of the protest.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.