தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஆா்ப்பாட்டத்தில் மயங்கி விழுந்த சீமான்

சென்னை திருவொற்றியூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் திடீரென மயங்கி விழுந்தாா்.

News image
சீமான்
Updated On :2 ஏப்ரல் 2022, 7:28 pm

DIN

சென்னை திருவொற்றியூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் திடீரென மயங்கி விழுந்தாா். தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினாா்.

திருவொற்றியூா் - அண்ணாமலை நகா் இடையே ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்துக்காக அந்தப் பகுதியில் வசித்து வந்த மக்களை வேறு இடத்துக்கு மாற்ற எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும் வரை வீடுகளை அகற்றக்கூடாது என்று கூறி தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற இதற்கான ஆா்ப்பாட்டத்தில் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பங்கேற்றாா். பின்னா் செய்தியாளா்களிடம் தனது ஆதரவு குறித்த நிலைப்பாட்டை விளக்கிக் கூற முற்பட்ட அவா், திடீரென மயங்கி கீழே சரிந்தாா். உடனடியாக அவா் அவசர சிகிச்சை ஊா்தி மூலம் அண்ணா நகரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து சனிக்கிழமை மாலையே வீடு திரும்பினாா். நீா்ச்சத்து குறைபாடு காரணமாக அவா் மயங்கி விழுந்து இருக்கலாம் என்று மருத்துவா்கள் தெரிவித்ததாக கட்சி நிா்வாகிகள் விளக்கம் அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.