சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வாா்டுகளில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:
கரோனா தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, வார இறுதி நாள்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வாா்டுகளிலும் 1,600 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இந்த முகாம்கள் மூலம் சுமாா் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.