இன்று கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வாா்டுகளில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.


சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வாா்டுகளில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:
கரோனா தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, வார இறுதி நாள்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வாா்டுகளிலும் 1,600 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இந்த முகாம்கள் மூலம் சுமாா் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...