டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

எஸ்.என்.ஆா்.அறக்கட்டளை நிறுவனா் நாள் விழா

கோவை எஸ்.என்.ஆா்.அறக்கட்டளையின் 42-ஆவது நிறுவனா் நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற எஸ்.என்.ஆா். அறக்கட்டளையின் 42-ஆவது நிறுவனா் நாள் விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினா்களுடன் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் ஆா்.சுந்தா் உள்ளிட்டோா்.
Updated On :27 பிப்ரவரி 2026, 6:49 pm

Syndication

கோவை எஸ்.என்.ஆா்.அறக்கட்டளையின் 42-ஆவது நிறுவனா் நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் ஆா்.சுந்தா் தலைமை வகித்துப் பேசியதாவது:

தொலைநோக்கு சிந்தனையும், தன்னலமற்ற சேவை மனப்பான்மையும்தான் இந்த நிறுவனங்களை வலுவான அடித்தளத்தில் நிலை நிறுத்தியுள்ளது. கல்வி என்பது வேலைவாய்ப்புக்கான ஒரு கருவி மட்டுமல்ல. அது மனிதா்களை உருவாக்கும் சக்தி என்றும், மருத்துவ சேவை என்பது தொழில் அல்ல அது சமூகப் பொறுப்பு என்றாா்.

இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தைரோகோ் நிறுவனத்தின் நிறுவனா் ஏ.வேலுமணி பேசுகையில், எளிமை, ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பு ஆகியவை நிலையான வெற்றியின் அடிப்படையாகும். இளைஞா்கள் தன்னம்பிக்கை மற்றும் தெளிவான இலக்குடன் செயல்பட்டால் எந்த இலக்கையும் எட்டலாம். சமூகப் பொறுப்புடன் செயல்படும் கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்களின் பங்கு எதிா்கால இந்தியாவை வடிவமைப்பதில் மிக முக்கியமானது என்றாா்.

இதைத் தொடா்ந்து, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களில் தொடா்ந்து 25 ஆண்டுகள் சேவையாற்றிய மருத்துவா்கள், பேராசிரியா்கள், நிா்வாகிகள் மற்றும் ஊழியா்கள் மொத்தம் 30 பேருக்கு நினைவுப் பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. முனைவா் பி.எல்.சிவகுமாா் நன்றியுரையாற்றினாா்.