தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

வடபழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது

சென்னை வடபழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.

News image
கோப்புப்படம்
Updated On :23 ஜனவரி 2022, 5:20 am

DIN


சென்னை வடபழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.

சென்னையில் பிரசித்தி பெற்ற வடபழனி முருகன் கோயிலில் கடந்த 2007-இல் கும்பாபிஷேகம் நடந்தது. இதன்பிறகு, கும்பாபிஷேகம் நடத்துவதற்காகக் கடந்தாண்டு மார்ச் மாதம் பாலாலயம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை 9.30 மணியளவில் யாத்ரா தானம், திருக்கலசங்கள் எழுந்தருளல் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, காலை 10.30 மணிக்கு அனைத்து ராஜகோபுரங்கள் மற்றும் விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மாலை 6 மணிக்கு மகாபிஷேகம், திருக்கல்யாணம் நடைபெற, முருகப்பெருமான் ஆலயத்தை வலம் வந்து காட்சி அளிக்கிறார்.

ஞாயிறு முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.