வடபழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது
சென்னை வடபழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.


சென்னை வடபழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.
சென்னையில் பிரசித்தி பெற்ற வடபழனி முருகன் கோயிலில் கடந்த 2007-இல் கும்பாபிஷேகம் நடந்தது. இதன்பிறகு, கும்பாபிஷேகம் நடத்துவதற்காகக் கடந்தாண்டு மார்ச் மாதம் பாலாலயம் செய்யப்பட்டது.
இதையும் படிக்க | சீர்காழி புற்றடி மாரியம்மன்: பக்தர்களின்றி நடைபெற்ற தேரோட்டம்
இந்த நிலையில், இன்று காலை 9.30 மணியளவில் யாத்ரா தானம், திருக்கலசங்கள் எழுந்தருளல் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, காலை 10.30 மணிக்கு அனைத்து ராஜகோபுரங்கள் மற்றும் விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு மகாபிஷேகம், திருக்கல்யாணம் நடைபெற, முருகப்பெருமான் ஆலயத்தை வலம் வந்து காட்சி அளிக்கிறார்.
ஞாயிறு முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...