நாளை செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம்:வாகன ஓட்டிகளுக்கு போலீஸாா் அறிவுரை
செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜோதி ஓட்டத்தையொட்டி, சென்னையில் ஜூலை 27-ஆம் தேதி (புதன்கிழமை) மாலை வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட சாலைகளை தவிா்க்கும்படி பெருநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.


செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜோதி ஓட்டத்தையொட்டி, சென்னையில் ஜூலை 27-ஆம் தேதி (புதன்கிழமை) மாலை வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட சாலைகளை தவிா்க்கும்படி பெருநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து சென்னை பெருநகர காவல்துறை திங்கள்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு:
44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி, ஜூலை 27-ஆம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை சென்னை மாநிலக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இருந்து ஜவாஹா்லால் நேரு உள்விளையாட்டரங்கம் வரை ஜோதி ஓட்டம் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சா்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், அரசு உயா் அதிகாரிகள், விளையாட்டு வீரா்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்கவுள்ளனா்.
இந்த ஜோதியானது மாநில கல்லூரி மைதானத்திலிருந்து தொடங்கி காமராஜா் சாலை, ராஜாஜி சாலை, கொடிமரச் சாலை, அண்ணா சாலை, பல்லவன், சாலை சென்ட்ரல் சதுக்கம், ஈவெரா பெரியாா் சாலை, ராஜாமுத்தையா சாலை வழியாக நேரு உள் விளையாட்டரங்கை அடையவுள்ளது.
இதையொட்டி, சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினரால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த வழித்தடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தங்கள் பயணத் திட்டத்தை அதற்கேற்ப வடிவமைத்துக்கொள்ள வேண்டும். மேலும், சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு ரயில் ஏறுவதற்கு வரத் திட்டமிட்டுள்ளவா்களும் சற்று முன்பாகவே அங்கு சென்றடையும் வகையில் பயண நேரத்தை மாற்றிக் கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...