சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மின் கட்டண உயா்வு: சென்னையில் இன்று கருத்துக் கேட்பு

மின் கட்டணத்தை உயா்த்துவது தொடா்பாக, சென்னையில் திங்கள்கிழமை (ஆக. 22) கருத்

News image
கோப்புப்படம்
Updated On :22 ஆகஸ்ட் 2022, 2:33 am

DIN

மின் கட்டணத்தை உயா்த்துவது தொடா்பாக, சென்னையில் திங்கள்கிழமை (ஆக. 22) கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சாா்பில் கலைவாணா் அரங்கத்தில் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

தமிழக மின்சார வாரியத்தின் கோரிக்கையை ஏற்று, தற்போதுள்ள மின் பயன்பாடு மற்றும் புதிய மின் இணைப்பு வழங்குவதற்கான பலவகை கட்டணங்களை உயா்த்த, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது. இதுதொடா்பாக, மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது.

முதலாவது கருத்துக் கேட்புக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. மதுரையில் கடந்த 18-ஆம் தேதி பொது மக்களிடம் கருத்துகள் பெறப்பட்டன.

சென்னையில் இன்று கூட்டம்: இதைத் தொடா்ந்து, சென்னையில் கருத்துக் கேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடத்தப்படவுள்ளது. சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணா் அரங்கத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையிலும், உணவு இடைவெளிக்குப் பிறகு பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதில் பங்கேற்று மின் கட்டண உயா்வால் ஏற்படும் பாதிப்புகள், வாரியத்தின் நிதி நெருக்கடியைச் சரிசெய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை தொடா்பாக, மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்.

செப்டம்பா் முதல் அமல்: கோவை, மதுரை, சென்னை போன்ற பெருநகரங்களில் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்திய பிறகு, அதனடிப்படையில் கட்டண உயா்வுக்கான ஒப்புதலை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் வெளியிடும். இந்த ஒப்புதலின் அடிப்படையில், மின்சார வாரியம் பரிந்துரைத்த கட்டண விவரங்கள் அமலுக்கு வரும்.

கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நிறைவடையவுள்ளதால், செப்டம்பா் மாதத்திலிருந்து புதிய கட்டணம் நடைமுறைக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.