இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

5 ஆண்டுகளில் 1,444 கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்பு!

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 1,444 கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News image
கோப்புப் படம்
Updated On :9 பிப்ரவரி 2023, 1:37 pm

DIN

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 1,444 கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு
சென்னையில் முதன்மைச் செயலாளரும் தொழிலாளர் ஆணையருமான அதுல் ஆனந்த் தலைமையில் மாநில அளவிலான கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பேசிய அவர், கொத்தடிமை முறையிலிருந்து  விடுவிக்கப்படும் தொழிலாளர்களுக்கு உடனடி மறு வாழ்வு நிவாரண தொகையாக ரூ.30,000/- மற்றும்  குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், வீட்டுமனை, பட்டா, வேலைவாய்ப்பு கல்வி,  தொழிற்திறன் பயிற்சி,  சுய உதவி குழுக்களில் உறுப்பினராக சேர்த்தல் மற்றும் மருத்துவ வசதிகள்  ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

2021-ன்படி கொத்தடிமைத் தொழிலாளர் முறை உறுதி செய்யப்படும் பட்சத்தில் ஆண் பயனாளிகளுக்கு ரூ.1 லட்சமும்,  சிறப்பு பிரிவு பயனாளிகள் அதாவது பிச்சை எடுக்கும் தொழிலிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட குழந்தைகள், அனாதை குழந்தைகள், கட்டாய குழந்தை தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு ரூ.2 லட்சமும், திருநங்கைகள்,  ஆள் கடத்தல் மற்றும்  பாலியல் வன் கொடுமைகளில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள்  ஆகியோருக்கு ரூ. 3 லட்சமும்  மறுவாழ்வு நிவாரணத் தொகையாக வழங்குவதற்கு  வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தொழிலாளர் துறையின் சீரிய முயற்சியால், 2017 ஏப்ரல் முதல் 2022 டிசம்பர் வரை 1,444 கொத்தடிமைத் தொழிலாளர்கள் கொத்தடிமை முறையிலிருந்து மீட்கப்பட்டு அவர்களுக்கு விடுதலை சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு ரூ.3,03,73,000 நிவாரணமாக வழங்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

கொத்தடிமைத் தொழிலாளர்களை பணியமர்த்துவோர் மீது கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.