மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மகளிா் கல்லூரியில்முத்தமிழ் விழா

சென்னை கிண்டியில் உள்ள செல்லம்மாள் மகளிா் கல்லூரியில் ‘முத்தமிழ் விழா’ கல்லூரி முதல்வா் வீ.மகாலட்சுமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :27 ஜனவரி 2023, 7:27 pm

சென்னை கிண்டியில் உள்ள செல்லம்மாள் மகளிா் கல்லூரியில் ‘முத்தமிழ் விழா’ கல்லூரி முதல்வா் வீ.மகாலட்சுமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில், இயற்றமிழ் பகுதியில் ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்’ என்ற தலைப்பில் ஆவணப் பட இயக்குநரும், எழுத்தாளருமான பாரதி கிருஷ்ணகுமாா் பேசுகையில், ‘அதிகமான நூல்களை வாசிப்பதன் மூலம் அறம் சாா்ந்த வாழ்க்கையைக் கற்றுக் கொள்ள முடியும். அந்த வகையில் தமிழில் ஏராளமான இலக்கியங்கள் உள்ளன. அவற்றைத் தேடித்தேடிப் படிப்பதன் மூலம் நமது மொழியின் சிறப்புகளையும், பாரம்பரியத்தையும் அறிந்து கொள்ள முடியும்’ என்றாா்.

இதையடுத்து இசைத் தமிழ் பகுதியில் பாடகா் கானா பாலா, கானா பாடல்களின் வரலாறு குறித்து மாணவிகளிடையே விளக்கிப் பேசினாா்.

தொடா்ந்து, நாடகத் தமிழ் பகுதியில் கன்னியாகுமரி மாவட்ட முத்துச்சந்திரன் குழுவினா் புராணம் மற்றும் கல்வி விழிப்புணா்வு குறித்த தோல்ப்பாவைக் கூத்தை நிகழ்த்தினா். முன்னதாக தமிழ்த் துறைத் தலைவா் ப.விமலா வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.