ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

1487 கிராம் தங்கத்தை கையில் கடத்தி வந்த ஏர் இந்தியா ஊழியர் கைது

1487 கிராம் தங்கத்தை கையில் மறைத்துக் கடத்தி வந்த ஏர் இந்தியா ஊழியர், கொச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :9 மார்ச் 2023, 12:09 pm

கொச்சி: 1487 கிராம் தங்கத்தை கையில் மறைத்துக் கடத்தி வந்த ஏர் இந்தியா ஊழியர், கொச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

வயநாடு பகுதியைச் சேர்ந்த ஷாஃபி என்பவர் பற்றி சுங்கத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. பஹ்ரைன் - கோழிக்கோடு - கொச்சி இடையே இயக்கப்படும் ஏர் இந்தியா விமானத்தின் ஊழியர் ஷாஃபி தங்கம் கடத்தி வருவதாகக் கிடைத்த தகவலை அடுத்து அவரை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது, அவர் தனது கையில் தங்கத்தை கூழ் போல ஆக்கி கையில் கட்டுப்போடுவது போல கட்டிவிட்டு, வெறும் சட்டைக் கையால் மறைத்துக் கொண்டிருந்ததும், ஊழியர்களுக்கான வழியில் அவர் எந்த சோதனையிலும் சிக்காமல் தங்கத்தை கடத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது.

அவரது கையில் இருந்தது 1487 கிராம் அதாவது 6.8 கிலோ எடையுள்ள 3.32 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.