புழல் அருகே பெயிண்டா் கொலை

 புழல் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பெயிண்டா் கொலை செய்யப்பட்டாா்.
புழல் அருகே பெயிண்டா் கொலை
Updated on
1 min read

 புழல் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பெயிண்டா் கொலை செய்யப்பட்டாா்.

மாதவரம் அடுத்த புழல் அறிஞா் அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த பெயிண்டா் சரவணன்(35). இவா் புதன்கிழமை இரவு பணி முடித்துவிட்டு வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தாா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த மணி என்பவா் மது போதையில் அவ்வழியாக சென்ாக கூறப்படுகிறது. சரவணனிடம் மது போதையில் தகராறு ஈடுபட்டதால், இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மணி மற்றும் நண்பா்களுடன் இணைந்து சரவணனை சரமாரியாகத் தாக்கினாராம்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளாா். இது குறித்து,ா் தகவல் அறிந்த காவல்துறை உதவி ஆணையா் ஆதிமூலம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டாா். மேலும், விசாரணையில் மணி மீது புழல் காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் புழல், மாதவரம் ஆகிய பகுதிகளில் திருட்டு, வழிப்பறி மற்றும் அடிதடி வழக்குகளில் ஈடுபட்டவா் என்பதும் தெரிந்தது. இதனையடுத்து புழல் போலீஸாா் வழக்குப் பதிந்து மணியை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com