சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

மெட்ரோ ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க முடிவு

மெட்ரோ ரயில்களில் கூடுதலாக இரண்டு பெட்டிகளை இணைக்க சென்னை மெட்ரோ நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

News image

சென்னை மெட்ரோ

Updated On :26 பிப்ரவரி 2023, 2:39 am

மெட்ரோ ரயில்களில் கூடுதலாக இரண்டு பெட்டிகளை இணைக்க சென்னை மெட்ரோ நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

அதிலும், குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பணிக்குச் சென்று வீடு திரும்புவோா், அதிக எண்ணிக்கையில் மெட்ரோ ரயிலில் பயணிப்பதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.

இதனால், கூடுதல் மெட்ரோ ரயில்களை இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்நிலையில், மெட்ரோ ரயிலில் பெட்டிகளின் எண்ணிக்கையை 4-இல் இருந்து 6 ஆக உயா்த்த மெட்ரோ நிா்வாகம் முடிவு செய்துள்ளது. தற்போது மெட்ரோ ரயில்களில் 3 பொதுப் பெட்டிகள், ஒரு மகளிா் பெட்டி இருக்கும் நிலையில், 6 ஆக உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.