ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

நேரலையாக போக்குவரத்து கண்காணிப்பு: வாகன ஓட்டிகளுக்கு கிடைக்குமா நிம்மதி?

சென்னை மாநகரம் முழுவதும் சுமார் 300 முக்கிய சாலை சந்திப்புகளில் நேரடியாக போக்குவரத்துக் கண்காணிப்பு திட்டத்தை சென்னை போக்குவரத்துக் காவல்துறையினர் அறிமுகம் செய்யவிருக்கிறார்கள்.

நேரலையாக போக்குவரத்து கண்காணிப்பு

Published On :2 பிப்ரவரி 2024, 12:06 am IST


சென்னை: சென்னை மாநகரம் முழுவதும் சுமார் 300 முக்கிய சாலை சந்திப்புகளில் நேரடியாக போக்குவரத்துக் கண்காணிப்பு திட்டத்தை சென்னை போக்குவரத்துக் காவல்துறையினர் அறிமுகம் செய்யவிருக்கிறார்கள்.

சாலையின் முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்புக் கேமராக்கள் அமைத்து, நேரடியாக போக்குவரத்தைக் கண்காணிக்கும் திட்டத்தை செயல்படுத்த ரூ.1 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், இணையதள வரைபடங்களில், சென்னை மாநகரத்தின் போக்குவரத்து நிலைமை 5 நிமிடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். இதனால், வாகன ஓட்டிகள் முன்கூட்டியே தங்களது பயணத்தை  திட்டமிடவும், வாகன நெரிசல் ஏற்பட்ட சாலை, மேற்கொண்டு கடும் நெரிசலை எட்டுவதற்குள், அந்த சாலையில் போக்குவரத்தை அனுமதிக்காமல், மாற்றுப் பாதைகளுக்கு வாகன ஓட்டிகளைத் திருப்பி விட போக்குவரத்துக் காவலர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் இந்த திட்டம் குறித்து கூறப்படுகிறது.

தற்போது போக்குவரத்து நெரிசலைக் கையாள ஏதேனும் போக்குவரத்து மாற்றங்களை செய்வதாக இருந்தால், அதனை முதலில் சோதனை முயற்சியாக செய்துபார்த்துவிட்டு நடைமுறைப்படுத்துவதை போக்குவரத்துக் காவல்துறையினர் பின்பற்றி வருகிறார்கள்.

அதன் அடிப்படையில், அண்ணாசாலை அல்லது வடபழனி 100 அடி சாலையில் யு-டர்ன் முறையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வார இறுதி நாள்களில் இது சோதனை முயற்சியாக செய்யப்பட்டு, வெற்றி பெற்றால் நடைமுறைக்கு வரவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த திட்டம், மழைக்காலம் மற்றும் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருக்கும் நாள்களில் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த பயணளிப்பதாக இருக்கும் என்றும், இதனை வாகன ஓட்டிகள் செல்லிடப்பேசி செயலிகள் வாயிலாக அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தால் மாபெரும் உதவியாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.