அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

சீனா, ஹே ராம், அரசியல்.. ராகுல் - கமல் இடையேயான சந்திப்பில் பேசப்பட்டது என்ன?

எல்லையில் சீனாவின் ஆக்ரமிப்பு, ஹேராம் திரைப்படம், அரசியல் என பல்வேறு விவகாரங்கள் குறித்தும் காங்கிரஸ் எம்சி ராகுல் காந்தி, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் இடையே நடந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்

News image

சீனா, ஹே ராம், அரசியல்.. ராகுல் - கமல் இடையேயான சந்திப்பில் பேசப்பட்டது என்ன?

Updated On :2 ஜனவரி 2023, 5:50 pm IST

எல்லையில் சீனாவின் ஆக்ரமிப்பு, ஹேராம் திரைப்படம், அரசியல் என பல்வேறு விவகாரங்கள் குறித்தும் காங்கிரஸ் எம்சி ராகுல் காந்தி, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் இடையே நடந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் இருவரின் சந்திப்பு குறித்த விடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகியிருக்கிறது.

காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தியின் தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரை எனும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் கடந்த வாரம் தில்லியை வந்தடைந்தது. நடைப்பயணத்தில், ராகுல் காந்தியுடன் இணைந்துகொண்ட நடிகா் கமல் ஹாசன் சுமாா் 3 கி.மீ. யாத்திரையில் பங்கேற்றாா்.

அதன் பின்னா், தில்லி செங்கோட்டை முன் மாலை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தியுடன் கமல் ஹாசன் கலந்துகொண்டாா். 

இதன் தொடர்ச்சியாக இரு தலைவர்களின் சந்திப்பு தில்லியில் நடைபெற்றது. 

அதில் கமல் பேசுகையில், அப்பா காங்கிரசில் இருந்தார். அவரிடம் இளம்வயதில் காந்தியை விமரிசித்திருக்கிறேன். அதற்கு அப்பாவோ வரலாற்றை படி என்பார். பிறகு 24, 25 வயதில் காந்தியை பற்றி நானே தெரிந்து கொண்டேன். பிறகு அவரது ரசிகனாகவும் ஆகிவிட்டேன்.

அதை அடிப்படையாக வைத்தே ஹேராம் படத்தை எடுத்தேன். அந்தப் படத்தில் நானும் ஒரு கொலையாளியாக நடித்தேன். ஹேராம் படம், காந்திஜியை கொல்ல முயல்பவரின் கதை.

ஆனால் அவருக்கும் உண்மைக்கும் அருகே செல்ல செல்ல கொலையாளி மாறிவிடுகிறான்.  ஆனால்  அது மிகவும் தாமதம். அவனுடன் இருந்தவர் அதைச் செய்துவிடுகிறார். ஆனால் என்ன அவன் மனம் மாறிவிட்டான்.  இது தான் ஹேராம் என்று கமல் சொல்கிறார்.

இது உங்களின் யோசனையா? என்று ராகுல் காந்தி கேட்க, ஆம், என் இது என் தந்தையிடம் நான் கேட்கும் மன்னிப்பு  என்று கமல் பதிலளித்தார்.

பிறகு, சீன ஆக்ரமிப்பு குறித்து ராகுல் பேசுகையில், முன்னாள் ராணுவ வீரர்களிடம் பேசினேன். 21ஆம் நூற்றாண்டில் நமது பாதுகாப்பு அத்தனை சிறப்பானதாக இல்லை என்கிறார். தாக்குதல் எல்லையில் இருந்துதான் வர வேண்டுமென்று இல்லை, உள்ளிருந்தும் வரலாம்.

இணையத் தாக்குதல்கள், ஊடகத் தாக்குதல்கள் என பலவிதமாக நடக்கலாம். 21ஆம் நூற்றண்டில் பாதுகாப்புப் பற்றி நமக்கு ஒரு உலகக் பார்வை வேண்டும்.

அதில் நமது மத்திய அரசு தப்புக் கணக்குப் போட்டுவிட்டதோ என்று தோன்றகிறது. சீனா நமது எல்லையில் 2000 கிலோ மீட்டர்களை ஆக்ரமித்துள்ளது. ஆனால் நாம் அதைப் பற்றி எதுவுமே பேசவில்லை. பிரதமரும் எதுவும் கூறவில்லை என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.