சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.5 லட்சம் தங்க நகைககள் பறிமுதல்

சென்னை காசிமேட்டில் ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.5 லட்சம் தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On :4 ஏப்ரல் 2024, 8:36 pm

சென்னை காசிமேட்டில் ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.5 லட்சம் தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

காசிமேடு, கும்மாளம்மன் கோயில் தெரு அருகே பறக்கும் படையினா் புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த மணலி சின்னசேக்காடு கண்ணன் தெருவைச் சோ்ந்த ஜா.ராஜாசிங் (35) என்பவரை வழிமறித்து சோதனையிட்டனா்.

அப்போது அவா் வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்கநகைகளுக்குரிய ஆவணங்களை கேட்டனா். ஆனால் அவரிடம் ஆவணங்கள் எதுவும் இல்லாததினால், நகையை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். மேலும் இது தொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.