டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

ரூ.77 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்!

சென்னையில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.77 கோடி மதிப்பிலான தங்க நகைகளை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தது குறித்து...

News image

சென்னையில் ரூ.77 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்

கோப்புப்படம்

Updated On :27 மார்ச் 2026, 3:18 am

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னையில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.77 கோடி மதிப்பிலான தங்க நகைகளை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

சென்நை அசோக் நகர் 11 ஆவது நிழற்சாலை பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு வந்த மினி வேனை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.

அந்த மினி வேனில் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.77 கோடி மதிப்பிலான 381 கிலோ எடையுள்ள தங்கம், வெள்ளி நகைகள் கொண்டு செல்வது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து அவைகள் பறிமுதல் செய்யப்பட்டு நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

உரிய ஆவணம் இல்லாமல் ரூ.77 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் குறித்து நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அலுவலக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் ஒரே நாளில் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.77 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Regarding the seizure of gold jewellery worth Rs. 77 crores by the Election Flying Squad in Chennai that was carried without proper documents...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.