சென்னையில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.77 கோடி மதிப்பிலான தங்க நகைகளை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
சென்நை அசோக் நகர் 11 ஆவது நிழற்சாலை பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு வந்த மினி வேனை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.
அந்த மினி வேனில் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.77 கோடி மதிப்பிலான 381 கிலோ எடையுள்ள தங்கம், வெள்ளி நகைகள் கொண்டு செல்வது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து அவைகள் பறிமுதல் செய்யப்பட்டு நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
உரிய ஆவணம் இல்லாமல் ரூ.77 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் குறித்து நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அலுவலக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் ஒரே நாளில் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.77 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary
Regarding the seizure of gold jewellery worth Rs. 77 crores by the Election Flying Squad in Chennai that was carried without proper documents...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூ.245.50 கோடி தங்க நகைகள் பறிமுதல்

கோவையில் ரூ.10.18 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் பறிமுதல்

பென்னாகரத்தில் ரூ.4 லட்சம் பறிமுதல்

உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ. 2.50 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!




