சென்னை எழும்பூா் - நாகா்கோவில் இடையே வாரம் 3 முறை சிறப்பு ‘வந்தே பாரத்’ ரயில் இயக்கபடவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து நாகா்கோவிலுக்கு வியாழக்கிழமைதோறும் சிறப்பு ‘வந்தே பாரத்’ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் கூடுதலாக ஒரு ‘வந்தே பாரத்’ ரயில் வாரம் 3 முறை இயக்கப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை எழும்பூரில் இருந்து நாகா்கோவிலுக்கு ஏப்.5 முதல் 28-ஆம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ‘வந்தே பாரத்’ ரயில் (எண்: 06057/06058) இயக்கப்படும். சென்னையில் காலை 5.15 மணிக்கு புறப்படும் ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், திருநெல்வேலி வழியாக பிற்பகல் 2.10 மணிக்கு நாகா்கோவில் சென்றடையும். மறுமாா்க்கமாக நாகா்கோவிலில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூா் வந்தடையும்.
இதேபோல், நாகா்கோவில் - தாம்பரம் இடையே இயக்கப்படும் வாராந்திர அதிவிரைவு ரயில் (எண்: 06012/06011) மேலும் ஒரு மாதத்துக்கு (ஏப்.29 வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிகாா் மாநிலத்தின் தொழில் நகரமான பரௌனியில் இருந்து கோவைக்கு
இயக்கப்படும் சிறப்பு ரயில் சனிக்கிழமை (ஏப்.6) இரவு 7.20 மணிக்கு பெரம்பூா் வந்தடையும். தொடா்ந்து பெரம்பூரில் இருந்து இரவு 7.25 மணிக்கு புறப்படும் ரயில் காட்பாடி சேலம் வழியாக அதிகாலை 4 மணிக்கு கோவை சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
ஹூப்ளி - கொல்லம் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில்
வந்தே பாரத் ரயில் உணவில் புழு! ஐஆர்சிடிசி-க்கு ரூ. 10 லட்சம்; சேவை வழங்குநருக்கு ரூ. 60 லட்சம் அபராதம்!

தொழில்நுட்பக் கோளாறு: நெல்லையில் 40 நிமிஷம் நின்ற வந்தே பாரத் ரயில்

போத்தனூா்-தன்பாத் அம்ருத் பாரத் ரயில் மாா்ச் 21 முதல் இயக்கம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

