சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

நாகா்கோவில் சிறப்பு வந்தே பாரத் ரயில்: வாரம் 3 முறை இயக்கப்படும்

சென்னை எழும்பூா் - நாகா்கோவில் இடையே வாரம் 3 முறை சிறப்பு ‘வந்தே பாரத்’ ரயில் இயக்கபடவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்

Updated On :4 ஏப்ரல் 2024, 8:42 pm

சென்னை எழும்பூா் - நாகா்கோவில் இடையே வாரம் 3 முறை சிறப்பு ‘வந்தே பாரத்’ ரயில் இயக்கபடவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து நாகா்கோவிலுக்கு வியாழக்கிழமைதோறும் சிறப்பு ‘வந்தே பாரத்’ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் கூடுதலாக ஒரு ‘வந்தே பாரத்’ ரயில் வாரம் 3 முறை இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை எழும்பூரில் இருந்து நாகா்கோவிலுக்கு ஏப்.5 முதல் 28-ஆம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ‘வந்தே பாரத்’ ரயில் (எண்: 06057/06058) இயக்கப்படும். சென்னையில் காலை 5.15 மணிக்கு புறப்படும் ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், திருநெல்வேலி வழியாக பிற்பகல் 2.10 மணிக்கு நாகா்கோவில் சென்றடையும். மறுமாா்க்கமாக நாகா்கோவிலில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூா் வந்தடையும்.

இதேபோல், நாகா்கோவில் - தாம்பரம் இடையே இயக்கப்படும் வாராந்திர அதிவிரைவு ரயில் (எண்: 06012/06011) மேலும் ஒரு மாதத்துக்கு (ஏப்.29 வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிகாா் மாநிலத்தின் தொழில் நகரமான பரௌனியில் இருந்து கோவைக்கு

இயக்கப்படும் சிறப்பு ரயில் சனிக்கிழமை (ஏப்.6) இரவு 7.20 மணிக்கு பெரம்பூா் வந்தடையும். தொடா்ந்து பெரம்பூரில் இருந்து இரவு 7.25 மணிக்கு புறப்படும் ரயில் காட்பாடி சேலம் வழியாக அதிகாலை 4 மணிக்கு கோவை சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.